Advertisment

பரபரப்பு வீடியோ... காவல் நிலையம் உள்ளே புகுந்து போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள்

ஆந்திரா மாநிலம் காவல் நிலையம் உள்ளே புகுந்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதில் 5 காவலர்கள் காயமடைந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
andhra police, ஆந்திரா

andhra police, ஆந்திரா

ஆந்திரா மாநிலம் காவல் நிலையம் உள்ளே புகுந்து பொதுமக்கள் நடத்திய தாக்குதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆந்திரா போலீஸ் மீது பொதுமக்கள் நடத்திய தாக்குதல்:

நெல்லூர் மாவட்டம் ராப்பூர் காவல்நிலையத்திற்கு ஒரு பெண்ணை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த துணை இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் ராவ் மற்றும் மூன்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்தையும் போலீஸாரையும் தாக்கிய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment