Advertisment

முஸ்லிம்கள் மீது பா.ஜ.க போர்: ஒவைசி பேட்டி

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஆம் ஆத்மியின் கபட நாடகத்தை கடுமையாக விமர்சித்தார். டெல்லி அரசாங்கத்தின்கீழ் பொதுப்பணித்துறை வருவதால் அக்கட்சி ஜஹாங்கிர்புரி இடிப்புக்கு ஆதரவளித்ததாகக் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
முஸ்லிம்கள் மீது பா.ஜ.க போர்: ஒவைசி பேட்டி

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் தலைவர் அசாதுதீன் ஓவைசி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், நாடு முழுவதும் நடந்த வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் பாஜக பற்றியும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசினார்.

Advertisment

இந்த மாதம் நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

ஓவைசி: பாஜக எங்கே ஆட்சியில் இருந்தாலும், அதனிடம் பாசாங்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்வதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் மீது போர் பிரகடனம் செய்துள்ளனர். இரண்டாவதாக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே யார் பெரிய இந்து என்ற போட்டி அரசியலின் காரணமாக, இந்த பிரச்னைகள் அனைத்தும் தலைதூக்கியுள்ளன. ராஜஸ்தானின் கரௌலியில் என்ன நடந்தது, ஜார்கண்டில் என்ன நடந்தது, மகாராஷ்டிராவில் என்ன சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது - இது இப்போது முடிவில்லாத சுழற்சியாக உள்ளது. ஏனென்றால், ம்ற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சித்தாந்தம் எதுவும் இல்லை. எனவே, இந்துத்துவா அரசியலை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒரு பெரிய, சிறந்த கட்சி என்று அவர்கள் கூற முயற்சிக்கின்றனர்.

மூன்றாவதாக, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள கிராமப்புறங்களில், பல தொலைதூரப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது? இந்த அடக்குமுறை சம்பவங்கள், தடியடி சம்பவங்கள், சமூக புறக்கணிப்பு சம்பவங்கள், பற்றிய வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். மத்திய பிரதேசத்தில் உள்ள செந்த்வாவில் நடந்தது என்ன? துரதிர்ஷ்டவசமாக, ஊடகங்கள் அடிப்படை யதார்த்தத்தை தெரிவிக்கவில்லை. கார்கோனில் நடந்ததை விட இது மிகவும் மோசமானது. குறிப்பிட்ட வீடுகளில் கற்கள் வீசப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டதால் மூன்று நான்கு நாட்களாக உணவு உண்ணாத முஸ்லிம் குடும்பங்களும் உண்டு. எனவே, மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், டெல்லியில் நடந்தவைகளும் சட்டத்தின் ஆட்சி மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டுகள். என்னைப் போன்றவர்கள் சவால் விட்டு, எந்த சட்டத்தின் கீழ் கர்கோன் மற்றும் செந்த்வாவில் வீடுகளை இடித்தீர்கள் என்று கூர்மையான கேள்வியைக் கேட்டால், அவர்கள் கற்களை வீசுவது போன்ற வீடியோக்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

டெல்லியில், கலவரக்காரர்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றுமாறு டெல்லி பாஜக தலைவர் ஏப்ரல் 20ம் தேதி கடிதம் எழுதியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது, ​​யார் கலவரக்காரர்? யார் கலவரக்காரர் இல்லை என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? நீதிமன்றங்கள் உள்ளன. பாஜக இப்போது நான் விழிப்புடன் கூடிய நீதி என்று அழைப்பதில் ஈடுபடுகிறது, இது இறுதியில் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும். அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை சுதந்திரங்களின் முழு அஸ்திவாரமும் ஆபத்தில் உள்ளது. நீங்கள் நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் இருப்பதால் யாருடைய வீட்டை இடிக்க வேண்டும் என்பதை நீங்கள் அப்பட்டமாகத் தீர்மானிப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட சம்பவம் நடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ஜஹாங்கிர்புரிக்கு நீங்கள் சென்றிருந்தீர்கள்…?

ஓவைசி: ஜஹாங்கிர்புரியில், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957, பிரிவு 343, மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணைய சட்டம் 1947, ஆகியவற்றை அதிகாரிகள் மீறியுள்ளனர். அப்போது, ​​படிக்கட்டு இடிக்கப்பட்டதால், மன்சுரா என்ற பெண், இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டதாக, உங்கள் நாளிதழில் செய்தி வெளியானது. உங்கள் செய்தியே சரியான மின்சார மீட்டர் உள்ளது என்று கூறுகிறது. இப்போது, ​​அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடிப்பதில் பாஜக மிகவும் தயக்கம் காட்டினால், 2019 ஆம் ஆண்டில், டெல்லியில் 1,797 அங்கீகரிக்கப்படாத காலனிகள் இருப்பதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கூறியது. பாஜக அரசுக்கு சவால் விடுகிறேன். சைனிக் பண்ணைகள், வசந்த் குஞ்ச் என்கிளேவ், சத்தர்பூர் என்கிளேவ், சைதுலாஜாப் விரிவாக்கம் ஆகியவற்றை போய் இடிப்பீர்களா? போய் இடித்து பாருங்கள். 2008-09 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்தின் பொருளாதார ஆய்வு, நகரின் மக்கள் தொகையில் 23.7 சதவீதம் பேர் திட்டமிட்ட காலனிகளில் வாழ்கின்றனர். மீதி அனைவரின் வீடுகளையும் போய் இடிப்பீர்களா? நீங்கள் எதை இடித்து விட்டீர்கள்? புல்டோசர் மூலம் மசூதியின் வாயிலை இடித்து விட்டீர்கள். ஆனால், அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலின் அனுமதியற்ற ஆக்கிரமிப்புகளை புல்டோசர் போய் இடிக்கவில்லை. கோயிலின் ஆக்கிரமிப்பை அகற்ற அனுமதிக்கிறீர்கள். நீங்கள் ஒரு முஸ்லீம் கல்லறையை இடித்துவிட்டு, அந்த கல்லறைக்கு எதிரே ஒரு கோயில் உள்ளது. எதுவும் தொடவில்லை. நீங்கள் 24 பேரைக் கைது செய்கிறீர்கள், அவர்களில் 14-15 பேர் முஸ்லிம்கள் மற்றும் என்.எஸ்.ஏ சட்டம் 5 முஸ்லிம்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. அப்போது, ​​ஏப்ரல் 16-ம் தேதி கூட்டம் கூட நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று உங்கள் போலீஸ் கமிஷனர் கூறுகிறார். ஆனால், அந்த மக்கள் வாள்களுடளுடன் நாட்டுத் துப்பாக்கிகளையும் ஏந்தியபடி வந்தனர். பின்னர் மசூதியில் ஆத்திரமூட்டும் பாடல்களுடன் கொடி கட்டினார்கள். நினைவில் கொள்ளுங்கள், இது நடந்தது நம் நாட்டின் தலைநகரத்தில். ஏதோ கொஞ்சம் தொலைதூரத்தில் உள்ள அல்லது கிராமப்புற பகுதி அல்ல. இது மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் பாடம் கற்கவில்லை. அமித் ஷா தலைமையில் நடந்த நான்காவது வன்முறை சம்பவம் இது - முதலாவது வழக்கறிஞர்கள் போராட்டம், இரண்டாவது டிசம்பர் 22 படுகொலை, பின்னர் விவசாயிகள் போராட்டம், இப்போது இது. நீங்கள் ஒரு நோட்டீஸ் கூட வழங்கவில்லை, நீங்கள் விளக்கம் கூட கேட்கவில்லை. நீங்கள் போய் எல்லாவற்றையும் இடியுங்கள்.

இதில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஓவைசி: டெல்லி அரசின் கீழ் பொதுப்பணித் துறை வருவதால் நடந்த இடிப்பு சம்பவங்களுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மியின் கபட நாடகம் என்னவென்றால், மத்திய அரசு அவர்களின் (டெல்லி அரசின்) உரிமைகளைப் பறித்துவிட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்வதற்கு இதுவே சரியான உதாரணமாக அல்லது மேடையாக இருந்திருக்கும். எங்கள் பொதுப்பணித்துறை ஒத்துழைக்காது. ஆனால், அவர்கள் ஒத்துழைத்தனர். அதற்கும் மேலாக, உங்கள் செய்தித் தொடர்பாளர்கள் ஜஹாங்கிர்புரியை ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷிகளின் மையமாக அழைக்கிறார்கள். இந்துத்துவா சித்தாந்தத்தை செயல்படுத்துவதில் யார் பெரியவர் என்பதைக் காட்டுவதில் அவர்கள் (ஆம் ஆத்மி) பாஜகவுடன் போட்டி போடுகிறார்கள். தி ட்ரிப்யூனில் ஒரு கட்டுரையில் ஷியாம் சரண் சரியாக எழுதியிருப்பதைப் போல, குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தீவிரமயமாக்கப்பட்டால் என்ன நடக்கும்? இது அசாதுதீன் ஒவைசியிடம் இருந்து வரவில்லை, இந்த நாட்டிற்கு பல ஆண்டுகளாக சேவை செய்த, இந்த நாடு வளர்ந்து வருவதைப் பார்த்த, உலகில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த ஒருவரிடமிருந்து வருகிறது. அவர் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது வாதத்தை முன்வைக்கிறார். ஆனால், அவர்கள் இந்துத்துவா போட்டி அரசியலைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளின் முடிவில், பாதிக்கப்படுவது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்தான்.

சிறுபான்மை சமூகங்கள் முன் என்ன வாய்ப்பு இருக்கிறது?

ஒவைசி: என்ன வாய்ப்பு இருக்கிறது என்றால்? ஜனநாயக வழியில் போராட வேண்டும். இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு நாம் பயப்படவோ, கோழைகளாகவோ செயல்படவோ முடியாது. ஆம், மக்கள் வீடுகளை இழந்துள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம் அரசாங்கங்களால் பறிக்கப்பட்டுள்ளது. நாம் ஜனநாயக வழியில் போராட வேண்டும், நாம் எழுந்து நிற்க வேண்டும். அன்சாரிகள் பாஜகவுக்காக வேலை செய்தாலும் சரி, ஆம் ஆத்மி கட்சிக்காக வேலை செய்தாலும் அவர் இன்னும் அன்சாரிகள்தான் என்பதை முஸ்லிம் சமுதாயம் உணர வேண்டும். அதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே, நாம் ஜனநாயக ரீதியில் எதிர்த்துப் போராட வேண்டும், நம்முடைய வழக்குகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், நாம் உறுதியாக நிற்க வேண்டும். நாம் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் மறைக்கவோ மூடவோ முடியாது. ஜனநாயக ரீதியாக போராட வேண்டிய நேரம் இது. வரலாற்றை எழுதும் போது, ​​எதேச்சதிகார மற்றும் பாசிச அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு சிலர் நின்றதை குறிப்பிடும்.

மதச்சார்பற்ற கட்சிகள் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்திருக்கிறர்களா?

ஒவைசி: வீடுகள் கடைகள் இடிப்பு நடந்தபோது இந்த மதச்சார்பற்றவர்கள் எங்கே இருந்தார்கள்? ஆம் ஆத்மிக்கு 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். முஸ்லிம்கள் கூட அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மௌன விரதத்தில் (மௌன சபதம்) இருக்கும் ஒரு முதலமைச்சர் உங்களிடம் இருக்கிறார். அவர் வாய் திறப்பதில்லை. 2020 கலவரம் மற்றும் படுகொலைகள் நடந்தபோது, ​​முதல்வர் காந்தி சமாதியில் சென்று அமர்ந்தார். நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் இந்துத்துவா அரசியலில் பாஜகவுடன் போட்டியிடுகிறீர்கள். அதனால்தான், அவர்கள் ஜஹாங்கிர்புரியை வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாக்களின் மையமாக சொல்கிறார்கள். அங்கு வாழும் மக்கள் வங்காள மொழி பேசுவதால் மட்டும் அவர்களை பங்களாதேஷ் நாட்டவர்களாகவோ அல்லது ரோஹிங்கியாக்களாகவோ மாற்ற முடியாது. வெட்கமில்லாமல் இப்படிச் சொல்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவில் கூறப்பட்டுள்ள கண்ணியத்திற்கான உரிமை எங்கே இருக்கிறது? காங்கிரஸ் பற்றி என்ன? நான் அங்கே சென்ற பிறகு நீங்கள் எழுந்திருங்கள். நீங்கள் டெல்லியை ஆண்டுக்கணக்கில் ஆண்டீர்கள். உங்களுக்கு அந்தப் பகுதியில் எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால், நீங்கள் அன்றைக்குகூட எதிர்வினையாற்றவில்லை. அன்றைக்கே போக உங்களுக்கு தைரியம் இல்லை.

13 மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இனக்கலவரம் அதிகரித்து வருவதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓவைசி: இது வெறும் உதட்டளவில் பேசப்படுகிறது. களத்திற்கு பொருந்தாது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் எனப்படும் மதச்சார்பற்ற கட்சிகள் இந்துத்துவா போட்டி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜகவை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து வருகின்றனரே?

ஓவைசி: அது என்ன பெரிய அழைப்பு? சில முட்டாள் அறிவாளி அறிக்கையை தயார் செய்கிறார். பிறகு சம்மதம் எடுக்க மூன்று பேர் ஓடுகிறார்கள். இந்த பெயர் சேர்க்கப்பட்டது. அந்த பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் களத்தில் என்ன நடக்கிறது? நான் ஒரு உதாரணம் தருகிறேன். சரத் ​​பவார் சென்று பிரதமரை சந்தித்து அமலாக்கத்துறை ஏன் சஞ்சய் ராவத் மீது சோதனை செய்தது என்பது பற்றி பேசுகிறார். அவர், தனது சொந்தக் கட்சியின் அமைச்சர் நவாப் மாலிக்கைப் பற்றி ஏன் பேசவில்லை? நீங்கள் அதைப் பற்றி பேச வேண்டாம். நவாப் மாலிக் வழக்கு பற்றி அவர் ஏன் பேசவில்லை?

அவர் முஸ்லீம் என்று சொல்ல வேண்டுமா?

ஓவைசி: சரியாக, சஞ்சய் ராவத் பவாருக்கு வெளிப்படையான காரணங்களுக்காக மிகவும் முக்கியமானவர். அவர் (பவார்) ஒரு கட்சியின் தலைவர், அந்த கட்சியின் உறுப்பினர் சிறையில் வாடுகிறார். அதுவும் அவருக்குப் பின் தேதியிட்டுப் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டம். பாஜக எப்படி சட்ட விரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் செயல்படுகிறது என்பதைக் காட்ட இது ஒரு பொருத்தமான வழக்கு. ஆனால், நீங்கள் சஞ்சய் ராவத் பற்றி பேசுகிறீர்கள். 1999-2000 இல் மாலிக் குற்றம் சாட்டப்பட்ட எல்லா பரிவர்த்தனைகளும் நடந்தன. மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பி.எம்.எல்.ஏ சட்டம் வந்தது. அப்படியானால், குற்றம் நடந்ததாகக் கூறப்படும்போது நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தின் கீழ் ஒரு நபரை எவ்வாறு பதிவு செய்யலாம்? ராஜஸ்தானில் உள்ள கரௌலி பற்றி என்ன? கெலாட் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் முஸ்லிம்களின் 73 கடைகள் எரிக்கப்பட்டதாக கூறுகிறார். நீங்கள் ஏன் அவர்களுக்கு நிதி உதவி செய்யவில்லை? உண்மையில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும்… முதலமைச்சரால் ஏன் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட முடியாது? ஏனென்றால் நீங்கள் இந்துத்துவா போட்டி அரசியலில் ஈடுபடுகிறீர்கள்.

உங்களைப் போன்ற கட்சியை, உங்களைப் போன்ற தலைவரை இவை எங்கே விட்டுச் செல்கிறது?

ஓவைசி: அது என்னை எங்கே விட்டுச் செல்கிறது? என்னை எங்கே விட்டுச் செல்கிறது என்று தெரியவில்லை. ஒரு இந்திய எம்.பி என்ற முறையில் எனது கடமையை நிறைவேற்றி வருகிறேன். அரசியலமைப்பை பயன்படுத்தி தொடர்ந்து போராடுவேன். தொடர்ந்து குரல் எழுப்புவேன். என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அதுதான். இந்த நேரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.

நீங்கள் பாஜகவின் ‘பி டீம்’ என்று அடிக்கடி அழைக்கப்படுகிறீர்களே?

ஓவைசி: அது முக்கியமில்லை. நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆங்கில மொழி எதுவாக இருந்தாலும், அதிக உரிச்சொற்கள், விளக்கங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தலாம். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கர்கோன் மற்றும் செந்த்வாவில் நீங்கள் இல்லை. நீங்கள் கரௌலியில் இல்லை. ஜார்கண்டில், நீங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஆனால், நீங்கள் பார்க்க முடியாது. மக்கள் உங்களுக்கு மூன்று முறை ஆட்சியைக் கொடுத்த டெல்லியில் நீங்கள் களத்தில் இல்லை. எப்படியானாலும், தேர்தல் அரசியலை விட நாம் விவாதித்த இந்த விடயங்கள் முக்கியமானவை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp India Asaduddin Owaisi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment