குர்கானின் போரா கலான் கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் நேற்று (அக்டோபர் 16) நிகழ்ச்சியில் பேசினார். குர்கான், மானேசரில் வி.எச்.பி சார்பில் 'திரிசூல் தீக்ஷா' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைப்பு இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், "12-13 ஆண்டுகளுக்கு முன்பு, 3 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே போரா கலானில் தொழுகை நடத்த அனுமதி கோரினர். ஆடு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலத்தில் அனுமதி கோரினர். மௌல்லியாக்களோ அல்லது பிற ஊர்களில் இருந்து வருபவர்களோ யாரும் அங்கு வரமாட்டார்கள் என்று அப்போது புரிதல் இருந்தது.
ஆனால் தற்போது மெது மெதுவாக வெளியில் இருந்து வருகிறார்கள். அந்த இடத்தில் கற்கள் கொண்டு மசூதி கட்ட முயற்சிக்கின்றனர். யாராவது உங்கள் வீட்டிற்குள் நுழைந்து மசூதி கட்டினால், அதை நீங்கள் ஏற்பீர்களா? போரா கலானில் நடந்தது தான் நாளை குர்கான், மானேசர், ஹரியானா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கலாம். அவர்கள் முழு தேசத்தையும் மாற்ற நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பித்த போரா கலானின் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். இது இந்து தேசம்" என்று கூறினார்.
அங்குள்ளவர்கள் தொழுகை நடத்த தனியார் நிலத்தைப் பயன்படுத்தி வந்தனர். அங்கு பழுது நீக்கும் பணிகளை செய்து வந்தனர். மசூதிக்கு உள்ளூர் மக்கள் செல்ல எவ்வித ஆட்சேபனையும் இல்லை, அங்கு வந்த வெளியாட்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கிராம சர்பஞ்ச் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக 8-10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன் பஜ்ரங் தள் மற்றும் வி.எச்.பி உறுப்பினர்கள் முஸ்லிம் கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பொருட்களை புறக்கணிப்போம் என்று கூறினர். இதையடுத்து நேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சுரேந்திர ஜெயின் போலீசார் குறித்து கூறுகையில், “மேவாட்டில், பசுக்கொலை அதிகமாக உள்ளது, ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கத் துணிவதில்லை என்று கூறினார். தொடர்ந்து, பொது இடங்களில் தொழுகை நடத்துவது அவர்கள் வலிமையை காட்டுவதற்காக என்று கூறினார். அவர்கள் தொழுகை நடத்தவில்லை, பயங்கரவாதத்தை பரப்ப விரும்புகிறார்கள்" என்றார்.
வி.எச்.பி மானேசர் அமைப்பில் ஒருவரான மந்திரி தேவேந்தர் சிங் பேசுகையில், "நிகழ்ச்சியில் பாரத மாதாவையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. தனிநபர் மீது ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம், ஆனால் சில சூழ்நிலைகளில் தேவை ஏற்பட்டால், நமது சேதம், தாய்நாடு, மதத்தைப் பாதுகாக்க, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மரியாதைக்காக (தர்ம ரக்ஷா) நாங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்" என்று உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.