Advertisment

கோவிலில் தடை; சிபிஎம் ஏற்பாடு செய்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தும் பரதநாட்டிய கலைஞர்

இந்து இல்லை என்பதால் கோவிலில் தடை; சிபிஎம் இளைஞர் அமைப்பின் நிகழ்ச்சியில் நடனமாடும் பரதநாட்டிய கலைஞர்

author-image
WebDesk
New Update
கோவிலில் தடை; சிபிஎம் ஏற்பாடு செய்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தும் பரதநாட்டிய கலைஞர்

Barred from temple, dancer to perform at CPI(M) event: திருச்சூர் மாவட்டம், இரிஞ்சாலக்குடா நகரில் உள்ள கூடல்மாணிக்யம் கோவிலில் இந்து அல்லாதவர் என்ற காரணத்திற்காக தடை விதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பரதநாட்டிய கலைஞர் வி.பி.மான்சியா, இன்று (திங்கள்கிழமை) அதே நகரத்தில் CPI(M)ன் இளைஞர் அமைப்பான DYFI ஏற்பாடு செய்திருந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்.

Advertisment

“நான் ஒரு கலைஞராக பரதநாட்டியம் ஆடுகிறேன், கோவிலில் எனக்கு இடம் மறுக்கப்பட்டதற்கு அடையாளமாக அல்ல. ஆனால் கலைக்கு மதம் இல்லை என்று சமூகத்திற்கு ஒரு செய்தியைக் கொடுக்க DYFI விரும்புகிறது...’’ என்கிறார் மான்சியா.

இதையும் படியுங்கள்: விலைவாசி உயர்வு; விமானத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானியை சீண்டிய மகளிர் காங்கிரஸ் தலைவி

பரதநாட்டியத்தில் பிஎச்டி ஆராய்ச்சி அறிஞரான மான்சியா, முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்த போதிலும், பரதநாட்டிய நடனக் கலைஞராக இருந்ததற்காக இஸ்லாமிய மதகுருக்களின் கோபத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டார். பின்னர் அவர் இஸ்லாத்தை கைவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cpim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment