Advertisment

பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மெயில் ஐடி மறைக்க உதவிய தமிழக சிறுவன்

இமெயில் ஐடியின் முகவரியை மறைக்கும் குறீயிட்டை உருவாக்கிய தமிழக சிறுவன், அதனை டெலிகிராம் மற்றும் பிற தளங்கள் வாயிலாக பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

author-image
WebDesk
New Update
பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மெயில் ஐடி மறைக்க உதவிய தமிழக சிறுவன்

பெங்களூருவில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு இமெயில் அனுப்பியது குறித்த விசாரணையில், அதே மென்பொருள் தான் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பிய இமெயிலின் இணைய முகவரிகளை மறைக்கும் மென்பொருள் உருவாக்கியதில் மைனர் ஒருவர் கண்காணிப்பு வட்டத்தில் இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisment

கூடுதல் போலீஸ் கமிஷனர் ஏ சுப்ரமணியேஸ்வர ராவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, வெடிகுண்டு மெயிலின் முகவரியை மறைக்கும் சாப்ட்வேர் எங்கிருந்து உருவாக்கப்பட்டது என்பதை ட்ரெக் செய்ய முடிந்தது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவரின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிட யார் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. விசாரணையில் அனைத்தும் தெரியவரும் என்றார்.

கடந்த ஏப்ரல் 8 அன்று, பெங்களூருவில் உள்ள 16 பள்ளிகளுக்கு காலை 11 மணி முதல் 2.30 மணிக்குள் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அடுத்ததடுத்து வந்துள்ளது.

அந்த மெயிலில், உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இது சும்மா ஜோக் இல்லை. உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசாரை அழைக்கவும். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. தாமதிக்க வேண்டாம், இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், மே 13 அன்று, போபாலில் உள்ள 12 கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்டது. அதில், "உங்கள் பள்ளியில் 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக காவல் துறையை அழைக்கவும். இது சும்மா ஜோக் இல்லை. மீண்டும் சொல்கிறேன் இது ஜோக் இல்லை. நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. விரைவாக செயல்படுங்கள் இன்னும் நேரம் இருக்கிறது அல்லது சோகமான முடிவை காணலாம். அதன்பிறகு, உங்களை எச்சாரிக்கவில்லை என உங்களால் யாரிடமும் கூற முடியாது. இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பெங்களூரு போலீசார் சைபர் தீவிரவாத குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுடன் போபால் காவல் துறையும் இணைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் ட்ரெக் செய்துள்ள சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் மெயிலை அனுப்பவில்லை. ஆனால், இணைய முகவரியை மறைக்கும் குறீயிட்டை டெலிகிராம் மற்றும் பிற தளங்களில் மின்னஞ்சல் அனுப்பியவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளான் என்றார்.

அதேசமயம், பள்ளிகளுக்கு வந்த இ-மெயில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கின்றன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment