கர்நாடக மாநிலத்தின் எஜிபுரா என்ற இடத்தில், இன்று காலை திடீரென வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பலரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்தவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்து வருகின்றனர்.