Advertisment

பாரத் பந்த்: வடமாநிலங்களில் வெடிக்கும் போராட்டங்கள்!

ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்ட நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரத் பந்த்

பாரத் பந்த்

எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பாரத் பந்த அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பாரத் பந்த்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து வெளியான தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில்  பல்வேறு கண்டங்கள் எழுந்தனர். பல பகுதிகளில் போராட்டங்களும் வெடித்தன.  இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு,  நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில்  எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.

இந்நிலையில், இந்த சட்டமசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு அமைப்புகள் இன்று (6.9.18) நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன.

இதன் காரணமாக வடமாநிலங்களில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்ட நடத்திய்வர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

 

Bihar Sc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment