Advertisment

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு; பா.ஜ.க எதிர்ப்பை தீவிரப்படுத்திய ஆம் ஆத்மி

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு; ஆனால், பா.ஜ.க.,வை எதிர்ப்பதில் பின்வாங்க மாட்டோம் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

author-image
WebDesk
New Update
டெல்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு; பா.ஜ.க எதிர்ப்பை தீவிரப்படுத்திய ஆம் ஆத்மி

Mallica Joshi

Advertisment

BJP’s challenger role in its sights, AAP braces to ride out Sisodia, Jain storm: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) சோதனை நடைபெற்ற நிலையில், டெல்லியின் கல்வி முறையை மேம்படுத்த ஆம் ஆத்மி அரசின் முயற்சிகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட முதல் பக்க செய்தி அறிக்கையின் மூலம் தேசத்திற்கு வாழ்த்து தெரிவித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஊடக உரையைத் தொடங்கினார்.

பின்னர், மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான சி.பி.ஐ.,யின் நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது என்றும், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு சவாலாக இருப்பதில் இருந்து தனது கட்சி பின்வாங்காது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுபடுத்தினார்.

இதையும் படியுங்கள்: கலால் வரி முறைகேடு: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஆகஸ்ட் 17 அன்று, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் டால்கடோரா ஸ்டேடியத்தில் "மிஷன் டு மேக் இந்தியா நம்பர் 1" மற்றும் அவரது "பஞ்ச் காம்" அல்லது இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களின் கண்ணியம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பு, மரியாதை மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சரியான விலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்ச தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

publive-image

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து தனது "பஞ்ச் பிரான் (ஐந்து தீர்மானங்கள்)" அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இது நடந்தது.

தனது எட்டு நிமிட உரையின் போது, ​​அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை சி.பி.ஐ.,யின் ரெய்டு பற்றி குறிப்பிட்டார். கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதால், மத்திய ஏஜென்சியான சி.பி.ஐ-யை அதன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, காங்கிரஸுக்குப் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் இரண்டாவது கட்சியாக மாறியது முதல், அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் மோடியையும் பா.ஜ.க.,வையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்.

பல உரைகளில், அது டெல்லி சட்டமன்றத்திலோ அல்லது குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தல்களின் போது, ​​​​கெஜ்ரிவால் மோடியின் பெயரைச் சொல்வதிலிருந்தும் அவரை குற்றம்சாட்டுவதிலிருந்தும் அரவிந்த கெஜ்ரிவால் பின்வாங்கவில்லை. முன்னதாக 2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளை இழந்ததால் அவர் அதைத் தவிர்த்தார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஒரு அற்புதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாபில், 2017 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட அக்கட்சி முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுத்தது, பின்னர் 2022 ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

publive-image

2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஆம் ஆத்மி முதன்முதலில் தொடங்கியபோது, ​​தற்போதைய காங்கிரஸ் கட்சி அறிமுக கட்சியான ஆம் ஆத்மியை "தொடக்கமற்ற கட்சி" என்று நிராகரிக்க முயன்றது. எவ்வாறாயினும், ஆம் ஆத்மி 28 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க.,வை விட வெறும் 4 இடங்கள் பின்தங்கியிருந்தது. மேலும் காங்கிரஸின் வெளிப்புற ஆதரவுடன் அதன் அரசாங்கத்தை அமைத்தது, 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் ஆம் ஆத்மி அரசு 49 நாட்கள் மட்டுமே நீடித்தது.

2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் மொத்தம் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, அவை பஞ்சாபில் உள்ள தொகுதிகள் ஆகும். வாரணாசி தொகுதியில் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார்.

பிப்ரவரி 2015 இல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டபோது, ​​அது தேர்தலில் வெல்லும் தாகத்துடன் உள்ள ஒரு வித்தியாசமான கட்சியாக இருந்தது. மேலும் 67 இடங்களை கைப்பற்றியது.

2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் முடிவு ஆம் ஆத்மிக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், 20 இடங்களை வென்றது. கட்சியின் வியூகவாதிகள் அப்போது, ஏனெனில் கட்சி அதிக இலக்கை நோக்கி தனது பார்வையை நிர்ணயித்துள்ளது என்றனர். “உங்கள் முதல் தேர்தலில் ஒரு மாநிலத்தில் 20 இடங்களை வெல்வது சிறிய சாதனையல்ல. ஆம் ஆத்மி வெற்றி பெறுவது இப்படித்தான், முதலில் சிறிது சிறிதாக, பின்னர் ஒரேயடியாக," என்று ஒரு மூத்த ஆம் ஆத்மி தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம், கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்ததை அடுத்து, அது விரைவில் தேசியக் கட்சியாக மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும், “டெல்லி மற்றும் பஞ்சாபைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி இப்போது கோவாவிலும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், அதிகாரப்பூர்வமாக தேசிய கட்சியாக அறிவிக்கப்படும்,'' என்றும் அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி தனது பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கியுள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் களத்தில் இறங்க தயாராகி வரும் நிலையில், இரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 6% வாக்குகளைப் பெறுவார்கள் என்று அதன் தலைவர்கள் நம்புகிறார்கள். "எங்கள் நோக்கம் நிச்சயமாக உயர்ந்தது, ஆனால் நாங்கள் விரைவில் ஒரு தேசிய கட்சியாக மாறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று ஒரு தலைவர் கூறினார்.

ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் அதன் தோல்வி, பஞ்சாபில் (சங்ரூரிலிருந்து பகவந்த் மான்) 1 இடத்தில் மட்டுமே வென்றதால், பா.ஜ.க, குறிப்பாக மோடி குறித்து பேச முடியாமல், ஆம் ஆத்மி மௌன நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் 2020 இல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதன் மற்றொரு வெற்றி, அதன் குரல், நம்பிக்கை மற்றும் ஆக்ரோஷம் ஆகியவற்றை மீட்டெடுத்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையும் போது, அரவிந்த் ​​கெஜ்ரிவால் பா.ஜ.க மற்றும் மோடியை தாக்கினார், பா.ஜ.க தலைவர்கள் "தி காஷ்மீர் பைல்ஸ்" படத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார், அதை அவர் "ஜூட்டி படம்" என்று அழைத்தார்.

இதையடுத்து, பணமோசடி குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டதை அடுத்து, மோடி மற்றும் பா.ஜ.க.,வை கடுமையாக சாடிய அரவிந்த் கெஜ்ரிவால், அனைத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதனால் அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்ப முடியும் என்று கூறினார்.

சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சிலர் "இலவச கி ரேவ்டி" (இலவசங்கள்) விநியோகம் செய்கிறார்கள் என்று மோடி கூறியதை அடுத்து, மோடி ஆட்சி மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால், இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம் ஒரு வளர்ந்த தேசத்தின் முன்நிபந்தனைகள் என்று ஆம் ஆத்மி நம்புவதாகக் கூறினார். அவை "ரெவ்டி" (இனிப்பு) அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆனால், பா.ஜ.க.வுடனான தனது போரில் முன்னோடியாக இருக்கும் அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சிக்கு இது கடினமான காலகட்டம் என்பதை அறிந்திருக்கிறது. "நாங்கள் போராடுவோம், பின்வாங்க மாட்டோம். பல தடைகள் இருக்கும், ஆனால் நாம் முன்னேறி இந்தியாவை நம்பர் 1 ஆக மாற்ற வேண்டும், ”என்று அரவிந்த கெஜ்ரிவால் தனது வெள்ளிக்கிழமை உரையின் போது கூறினார்.

அதன் இரண்டு முக்கிய அமைச்சர்களான சத்யேந்திர ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ், வந்து நிலையில் வரும் நாட்கள் கட்சிக்கு விஷயங்கள் கடினமாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment