Advertisment

ஆண் மற்றும் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்கும் கறுப்பு பூஞ்சை தொற்று: புதிய ஆய்வு

Black fungus found more in men, people with diabetes Tamil News: "கறுப்பு பூஞ்சை" என்று அழைக்கப்படும் மியூகோமிகோசிஸால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என 4 இந்திய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
India news in tamil: black fungus found more in men, people with diabetes

Black fungus India news in tamil:  ‘கோவிட் -19 மியூகோமைகோசிஸ், உலகெங்கிலும் இந்தியாவிலும் பதிவான வழக்குகள் குறித்த முறையான ஆய்வு’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவிட் -19 நோயாளிகளின் 101 வழக்குகள் மியூகோமைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அரிதான ஆனால் தீவிரமான பூஞ்சை தொற்று பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 79 பேர் ஆண்கள் என்று அது கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் ஒற்றை மிக முக்கியமான ஆபத்து காரணியாகவும் கண்டறியப்பட்டது. மேலும் 101 பேரில் 83 பேர் "கறுப்பு பூஞ்சை" என்று அழைக்கப்படும் மியூகோமிகோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

எல்சேவியர் என்ற இதழில் வெளியிடப்பட உள்ள இந்த ஆய்வை, கொல்கத்தாவில் உள்ள ஜி.டி மருத்துவமனை மற்றும் நீரிழிவு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அவதேஷ் குமார் சிங் மற்றும் டாக்டர் ரிது சிங், மும்பையின் லிலாவதி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சஷாங்க் ஜோஷி மற்றும் புது டெல்லியில் உள்ள தேசிய நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் அனூப் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த 82 பேர் உட்பட 101 நோயாளிகளை ஆய்வு செய்தனர். மேலும் அமெரிக்காவிலிருந்து 9 பேரிடமும், ஈரானில் இருந்து மூன்று பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்றுடன் தொடர்புடைய மியூகோமிகோசிஸ் ஒரு கொள்ளை நோயாக மாறியுள்ளது. இந்த நோயால் அதிகபட்ச இறப்புகள் (90) மகாராஷ்டிராவிலிருந்து இதுவரை பதிவாகியுள்ளது.

இந்த ஆய்வில் 101 பேரில் 31 பேர் பூஞ்சை தொற்று காரணமாக இறந்துள்ளனர். மியூகோமிகோசிஸை உருவாக்கிய 101 நபர்களில் 60 பேருக்கு செயலில் கோவிட் -19 தொற்று இருப்பதாகவும், 41 பேர் மீண்டு வந்ததாகவும் தரவு காட்டுகிறது. மேலும், 101 பேரில் 83 பேருக்கு நீரிழிவு நோய், மூன்று பேருக்கு புற்றுநோய் இருந்தது என்று தெரிய வந்துள்ளது.

மியூகோமைகோசிஸ் நோயாளிகள் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்ததாக எண்டோகிரைனாலஜிஸ்ட் டாக்டர் ஷாஷாங்க் ஜோஷி கூறுகையில், "மொத்தம் 76 நோயாளிகளுக்கு கார்டிகோஸ்டீராய்டு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிப்போர்ட் இருந்தது. 21 பேருக்கு ரெம்டெசிவிர் மற்றும் நான்கு டோசிலிசுமாப் வழங்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த 60 வயதான நீரிழிவு நோயாளிக்கு ஸ்டீராய்டு மற்றும் டோசிலிசுமாப் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர் பூஞ்சை தொற்றுக்கு ஆளானார். ஆனால் மும்பையில் நீரிழிவு நோய் இல்லாத 38 வயது நபர் உயிர் பிழைத்துள்ளார். கொரோனா உடன் நீரிழிவு நோயாளிகளில் இறப்பு ஆய்வில் அதிகமாக கண்டறியப்பட்டது.

இந்த பூஞ்சை தொற்று மூக்கு, சைனஸ்கள், சுற்றுப்பாதை, மத்திய நரம்பு மண்டலம், நுரையீரல், இரைப்பை, தோல், தாடை எலும்புகள், மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 89 க்கும் மேற்பட்டவர்களுக்கு, மூக்கு மற்றும் சைனஸில் பூஞ்சை வளர்ச்சி காணப்படுவதாக ஆய்வு காட்டுகிறது. கோவிட் -19 சுவாச அமைப்பை மிகவும் பாதிக்கிறது என்பதால் இது இருக்கலாம்" என்று கூறினார்.

குறைந்த ஆக்ஸிஜன் (ஹைபோக்ஸியா), உயர் குளுக்கோஸ், அமில ஊடகம் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு காரணமாக வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாடு குறைதல் போன்ற சிறந்த சூழலில் கோவிட் -19 உள்ளவர்களில் பூஞ்சை தொற்று பரவுகின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூஞ்சை நோய்த்தொற்றின் உலகளாவிய பாதிப்பு ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 0.005 முதல் 1.7 வரை பதிவாகியுள்ளது. இந்தியாவில், நீரிழிவு நோயாளிகள் அதிகமாக இருப்பதால் இது 80 மடங்கு அதிகம் என்றும் ஆய்வு கூறுகிறது.

"நோயாளிகளுக்கு கார்டிகோஸ்டீராய்டுகளின் நியாயமான சான்றுகள் அடிப்படையிலான பயன்பாடு" மற்றும் அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த ஆய்வு அறிவுறுத்தியதாக ஜோஷி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil

India Maharashtra Mumbai Covid 19 Research Covid 19 In India Black Fungus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment