Advertisment

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
bhagwant mann residence bomb, breaking news, bhagwant mann residence bomb found, chandigarh bomb, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், latest news, chandigarh news, news, news today, Tamil indian express

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது.

Advertisment

சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

ராஜிந்திரா பூங்காவில் முதல்வர் பயன்படுத்திய ஹெலிபேடில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த இடம் கான்சல் உடன் நாயகோனை இணைக்கும் சாலைக்கு அருகில் உள்ளது.

இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டருக்குள், பஞ்சாப் மற்றும் ஹரியானா சிவில் செயலகங்கள் மற்றும் இரு மாநிலங்களின் விதான் சபைகளும் அமைந்துள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் குறுஞ்செய்திக்கு பதிலளித்த சண்டிகர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மனிஷா சவுத்ரி கூறியதாவது: “ராஜிந்திரா பூங்காவிற்கு அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதாகப் புகார் தெரிவித்தார். சண்டிகர் உள்ளூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வெடிகுண்டு செயலிழப்புக் குழுவை விரைவில் அனுப்புமாறு இராணுவத் தலைமையகம் சந்திமந்திருக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

சண்டிமந்திர் இராணுவ கன்டோன்மென்ட் என்பது இந்திய இராணுவத்தின் மேற்கு ராணுவ தலைமையகம் ஆகும்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் பாதுகாப்புத் தலைவரும் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநருமான ஏ.கே. பாண்டே, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்: “இது வெளிப்படையாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வெடிகுண்டு. இது பொதுவாக இராணுவத்திலிருந்து டீலர்களை அகற்றுவதற்கு வழி செய்கிறது. அதில் துப்பாக்கி சுடும் முள் இருந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதை ஆய்வு செய்யும் நிபுணர்கள், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பார்கள்.” என்று கூறினார்.

இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற பஞ்சாப் காவல்துறையின் மற்றொரு ஏடிஜிபி ரேங்க் அதிகாரி கூறுகையில், “இது ஒரு பீரங்கி ஷெல் (வெடிகுண்டு). இதுபோன்ற பீரங்கி குண்டுகள் பஞ்சாபின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பழைய இரும்பு பொருட்களை வாங்கும் டீலர்களிடம் கிடைக்கின்றன என்றும் கூறினார். இதை பீரங்கி துப்பாக்கி இல்லாமல் சுட்டிருக்க முடியாது. மீதியை சண்டிகர் போலீசார் விசாரிக்க வேண்டும்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment