Advertisment

2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்: ஏழை மக்களுக்கு கிடைத்துள்ள சலுகைகள்!

208-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில், அருண் ஜெட்லி சில இலவச சலுகைகளை அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்:  ஏழை மக்களுக்கு கிடைத்துள்ள சலுகைகள்!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , 2018-19 நிதியாண்டிற்கான  மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்து வருகிறார்.

Advertisment

அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில், அருண் ஜெட்லி சில  இலவச சலுகைகளை அறிவித்துள்ளார்.  பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான  இலவச அறிவிப்புகள்.

*8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம்.

*4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டம்.

*இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை திட்டம்.

*10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் மருத்துவத்திட்டம்.

*எஸ். சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டிற்காக நிதியில் 50 சதவீத உயர்வு

*500 நகரங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் அம்ருத் திட்டம்

*சிறு, குறு தொழில்களின் வரிக்  குறைப்பு

*சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி.

*பழங்குடியினரை மேம்படுத்தும்  305 திட்டங்கள்

*பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி வீடுகள்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தக்யுள்ளதாக அருண் ஜெட்லி தெவித்துள்ளார். மேலும், 2018 -19 நிதியாண்டிற்கான பட்ஜெட் சாமனியர்களுக்கு பயன்பெறும் வகையில்,  அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2019 Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment