Advertisment

டெல்லி கலவரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரவில் நேரடி ஆய்வு

பெண்கள் தலைமையிலான ஜஃப்ராபாத் உள்ளிருப்பு போராட்டம் நடந்த நிலையில், அந்தப் போராட்டம் பாதுகாப்பு அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ajit doval

ajit doval

கடந்த 3 நாட்களாக டெல்லியில் நடைபெற்று வரும் கலவரம் செவ்வாய்க்கிழமை இரவும் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தார். முதலில் சீலம்பூரில் உள்ள டி.சி.பி (வடகிழக்கு) அலுவலகத்திற்கு சென்றார் தோவல். வேத் பிரகாஷ் சூர்யா, போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.  இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் முழு விபரங்களை அவர் கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

இமயமலை காளான்; மட்டன் பிரியாணி டிரம்ப்புக்கு பரிமாறப்பட்ட ராஷ்டிரபதிபவன் மெனு

ஆலோசனைக்குப் பிறகு, அதிகாலை 12.30 மணியளவில், வன்முறை மற்றும் தீ விபத்துக்குள்ளான பகுதிகளை தோவல் பார்வையிட்டார். செவ்வாய்க்கிழமை இரவு வரை சுமார் 20 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 67 போலிஸ் நிறுவனங்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். வன்முறை தொடர்ந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கேரள பயணத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மெட்ரோ நிலையத்தில் பெண்கள் தலைமையிலான ஜஃப்ராபாத் உள்ளிருப்பு போராட்டம் நடந்த நிலையில், அந்தப் போராட்டம் பாதுகாப்பு அதிகாரிகளால் அகற்றப்பட்டது. CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்த நிலையில், சனிக்கிழமையன்று பெண்கள் குழு ஜஃப்ராபாத் சாலையைத் தடுத்தபோது அது பெரும் போராட்டமாக மாறியது. இந்த உள்ளிருப்புக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்து,  போராட்டக்காரர்களை அகற்ற போலீசாருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் கபில் மிஸ்ரா.

சிஏஏ பற்றி டிரம்ப்: ‘நான் எதுவும் கூற விரும்பவில்லை. இந்தியா சரியான முடிவு எடுக்கும்’

உள்ளிருப்புக்களை அகற்றுவதற்கான அறிவிப்புகள் இரவு 7 மணிக்கு மசூதிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலமாக, அந்த இடத்திலுள்ள போலீஸ்காரர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாக ஜஃப்ராபாத்தின் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். "நள்ளிரவுக்குப் பின்னர் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை விதிக்கப் போவதாகவும், மக்கள் அதைக் கடைப்பிடிக்காவிட்டால் நிலைமை வன்முறையாக மாறும் எனவும் அறிவிப்புகள் வெளியாகின. ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியான வன்முறைகள் நடந்து வருவதால் நாங்கள் ஏற்கனவே பயந்தோம், ஒத்துழைப்பதே நல்லது என்று உணர்ந்தோம்” என்று உள்ளூர்வாசி சூஃபி கூறினார்.

 

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment