Advertisment

கொரோனா 3-ம் அலை: ஆயத்த பணிகளுக்காக ரூ. 23,123 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை புதிய தொகுப்புக்கு 23,123 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்தது

author-image
WebDesk
New Update
MP Mansukh Mandaviya with Prime Minister Narendra Modi

 Kaunain Sheriff M 

Advertisment

Cabinet clears Rs 23,123-crore booster to tackle Covid : அனைத்து 736 மாவட்டங்களிலும் குழந்தை பிரிவுகளை உருவாக்குதல், ஒரு மாவட்டத்திற்கு ஒரு யூனிட்டை ஆதரிக்கும் மருத்துவ எரிவாயு குழாய் அமைப்புகளுடன் 1,050 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டிகளை நிறுவுதல் மற்றும் ஒரு நாளைக்கு 5 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் தொலைத் தொடர்பு தளத்தை விரிவுபடுத்துதல் போன்றவை கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார தயாரிப்புத் தொகுப்பின் இரண்டாம் கட்டத்தின் மூலம் நிதி அளிக்கப்பட கூடிய முக்கியமான கூறுகளில் ஒன்றாகும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை புதிய தொகுப்புக்கு 23,123 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்தது, குறிப்பாக மாநில அரசுகளின் இரண்டாவது அலைக்கு தற்போதுள்ள முன்னெடுப்பை அதிகரிக்கவும், மூன்றாவது அலைக்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவை; யாருக்கு எந்த பதவி? முழு விபரங்கள் இங்கே!

மாவட்ட அளவில் குழந்தை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாவட்டங்களுக்கு தேவையான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார் என்பதை தனது முதல் ஊடகவியலாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கோடிட்டுக் காட்டினார். இரண்டாவது அலையின் போது நாம் சந்தித்த பிரச்சினைகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் இதைச் சமாளிப்பதற்கான வழிகளின் அடிப்படையிலும், புதிய இரண்டாவது தொகுப்பை வடிவமைத்துள்ளோம்" என்று மாண்டவியா கூறினார். ரூ .23,123 கோடியின் இரண்டாவது தொகுப்பில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக இந்த திட்டத்தை செயல்படுத்தும். இதில் மத்திய அரசு ரூ .15,000 கோடியையும், மாநில அரசுகள் ரூ .8,123 கோடியையும் செலவிடும் என்று அவர் கூறினார்.

மாநிலங்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே புதிய திட்டங்களுக்கு நிதி வழங்குவது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் அலையின் போது நமக்கான தேவைகள் என்பதை நாம் கண்டோம். படுக்கைகளின் தேவை அதிகமாக இருந்தது என்பது நமக்கு தெரியும்.எதிர்காலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவதில் நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநிலங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம். எதிர்காலத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பஞ்சமில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று மன்சுக் கூறினார்.

எதிர்காலத்தில், குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க என்ன வகையான வசதிகள் தேவை என்பதை மனதில் வைத்து நாங்கள் தொகுப்பை வடிவமைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

தொகுப்பின் ஒரு பகுதியாக, அனைத்து 736 மாவட்டங்களிலும் குழந்தை மருத்துவ பிரிவுகளை உருவாக்க ஆதரவு வழங்கப்படும், மேலும் அரசு மருத்துவமனைகளில் 20,000 ஐ.சி.யூ படுக்கைகளை அதிகரிக்கரிப்பது அவற்றில் 20 சதவீதம் குழந்தை ஐ.சி.யூ படுக்கைகளாக இருப்பதை உறுதி செய்யப்படுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.

தற்போதுள்ள சமூக சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (6-20 படுக்கை அலகுகள்) ஆகியவற்றில் கூடுதல் படுக்கைகளுக்கான முன் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நிதி உதவிகளையும் இந்த தொகுப்பு வழங்கும். அடுக்கு -2 அல்லது அடுக்கு -3 நகரங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களின் தேவைகளைப் பொறுத்து பெரிய கள மருத்துவமனைகளை (50-100 படுக்கை அலகுகள்) உருவாக்குவதற்கும் இது ஆதரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிக்க, இந்த தொகுப்பு 1,050 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டிகளை மருத்துவ எரிவாயு குழாய் அமைப்புடன் நிறுவுவதற்கான நிதியை வழங்கும். இது ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு யூனிட்டையாவது ஆதரிக்கும். கூடுதலாக, கோவிட் -19 நிர்வாகத்திற்காக இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், பிஎஸ்சி, மற்றும் ஜிஎன்எம் நர்சிங் மாணவர்களை நியமிக்க மாநிலங்களும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

தொற்றுநோய்களின் பிரதிபலிப்பில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்த தொகுப்பு கவனம் செலுத்தும் என்று மாண்டவியா கூறினார். மூன்று முக்கிய கூறுகளில் தகவல் தொழில்நுட்பத்தின் தலையீடு இருக்கும். Hospital Management Information System (HMIS) என்ற திட்டத்தை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உருவாக்க தேவையான ஆதரவை இந்த நிதி வழங்கும். இது ஒரு நாளைக்கு 5 லட்சம் தொலைத்தொடர்புகளை வழங்குவதற்காக ஈ.சஞ்சீவானி டெலி-கன்சல்டேஷன் தளத்தின் தேசிய கட்டிடக்கலை விரிவாக்கத்தை ஆதரிக்கும்.

புதிய தொகுப்பு மரபணு வரிசைமுறை இயந்திரங்களை வழங்குவதன் மூலம் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை (என்சிடிசி) ஆதரிக்கும்; கோவிட் -19 நிர்வாகத்திற்காக 6,688 படுக்கைகளை மறுநோக்கம் செய்வதற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய மருத்துவ நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்றும் இந்த தொகுப்பு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 லட்சத்தை தாண்டிய கொரோனா மரணங்கள்; இறப்பு விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம் என்ன?

Coronavirus Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment