Advertisment

2015 முதல் குஜராத் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதி 350% அதிகரிப்பு; சிஏஜி அறிக்கை

CAG: Transfer of Central funds to Gujarat agencies up by 350% since 2015: மத்திய அரசால் நேரடியாக மாற்றப்பட்ட நிதிகளின் அளவு 2015-16-ல் ரூ. 2,542 கோடியிலிருந்து 2019-20ல் 350 சதவிகிதம் அதிகரித்து ரூ .11,659 கோடியாக அதிகரித்துள்ளது என்று சிஏஜி சுட்டிக்காட்டியது.

author-image
WebDesk
New Update
2015 முதல் குஜராத் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதி 350% அதிகரிப்பு; சிஏஜி அறிக்கை

மாநிலத்தின் வருடாந்திர நிதி கணக்குகளில் பிரதிபலிக்காத தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட குஜராத்தில் உள்ள அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசிலிருந்து நேரடியாக மாற்றப்பட்ட நிதிகளின் அளவு 2015 முதல் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) குறிப்பிட்டார்.

Advertisment

குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மாநில நிதி தணிக்கை அறிக்கையில், “ஏப்ரல் 1, 2014 முதல், மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கான நிதி மற்றும் மாநில அரசுக்கான மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் நேரடியாக வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. குஜராத்தில், மத்திய அரசின் நிதியானது நேரடியாக மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மாற்றப்படுவது 2019-20 காலத்திலும் தொடர்ந்தது. என்பதை சிஏஜி கவனித்தது.

மத்திய அரசால் நேரடியாக மாற்றப்பட்ட நிதிகளின் அளவு 2015-16-ல் ரூ. 2,542 கோடியிலிருந்து 2019-20ல் 350 சதவிகிதம் அதிகரித்து ரூ .11,659 கோடியாக அதிகரித்துள்ளது என்று சிஏஜி சுட்டிக்காட்டியது.

அந்த அறிக்கையில், இந்திய அரசால் தனியார் துறை நிறுவனங்கள் (ரூ. 837 கோடி), தனியார் கல்வி நிறுவனங்கள் (ரூ .17 கோடி), அறக்கட்டளைகள் (ரூ .79 கோடி), பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் என்ஜிஓக்கள் (ரூ. 18.35 கோடி) மற்றும் தனிநபர்கள் (ரூ. 1.56 கோடி) ஆகியவற்றுக்கு 2019-20 இல் எப்படி கணிசமான நிதி நேரடியாக வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளுக்காக மத்திய அரசு நேரடியாக மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியை மாற்றுகிறது. இந்த நிதி மாநில பட்ஜெட் அல்லது மாநில கருவூல அமைப்பு மூலம் வழிநடத்தப்படாததால், வருடாந்திர நிதி கணக்குகள் அத்தகைய நிதிகளின் செலவுகளை கணக்கிடவில்லை. எனவே, அந்த அளவிற்கு, அரசின் வரவுகள் மற்றும் செலவுகள் மற்றும் பிற நிதி மாறிகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அளவுருக்கள், முழுமையான கணக்கீட்டை வழங்கவில்லை,” என்று சிஏஜி கவனித்தது.

2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசு நிதிகளின் முக்கிய இடமாற்றங்கள் நேரடியாக நடந்த சில திட்டங்களில் ரூ .3,133 கோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது, இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்கப்படுகிறது, மேலும் ரூ .1,667 கோடி காந்திநகர் மற்றும் அகமதாபாத்துக்கான மெட்ரோ-இணைப்பு எக்ஸ்பிரஸ்க்கானது, இப்போது குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படுகிறது, இது அகமதாபாத் மற்றும் சூரத்தில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்தும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் 50:50 கூட்டு முயற்சியாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ. 593 கோடி நிதி நேரடியாக மாற்றப்பட்டது, இது ஒரு வருடத்தில் கிராமப்புற வீடுகளுக்கு 100 நாட்கள் வேலை உறுதி திட்டமாகும். பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ .182 கோடி மற்றும் மகப்பேறு நன்மை திட்டமான பிரதான் மந்திரி மாட்ரு வந்தனா யோஜனாவிற்கு ரூ .97 கோடி.

குஜராத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், மத்திய அரசிடமிருந்து 2019-20 ஆம் ஆண்டில் பெருமளவு நிதியைப் பெற்றுள்ளன. அவை, மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ .1,826 கோடி) மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி).

மத்திய அரசின் இத்தகைய நேரடி நிதி பரிமாற்றங்கள் குறித்து, அகமதாபாத்தை தளமாகக் கொண்ட சர்தார் பட்டேல் பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரபல பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பேராசிரியர் ஒய்.கே.அலக் கூறினார், “ஒரு மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இருப்பினும், மெட்ரோ போன்ற வணிகத் திட்டங்களில் குறைபாடுகள் உள்ளன, அங்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. நேரடிப் பணப் பரிமாற்றம் என்பது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும், அங்கு குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தனிநபர்களுக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது மற்றும் அந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் மிகவும் தகுதியானவர்களுக்கு இது கிடைப்பதில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Central Government Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment