Advertisment

தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் : கர்நாடகாவிற்கு உத்தரவு

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, கர்நாடகாவின் தலைக்காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் : கர்நாடகாவிற்கு உத்தரவு

தமிழகத்திற்கு நாளை ( ஆகஸ்ட் 2ம் தேதி) முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, கர்நாடகாவின் தலைக்காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல் மேகதாது உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூரில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. தமிழகம், கர்நாடக மாநிலங்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் 9.50 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது. ஆனால் கர்நாடக அரசு காவிரி ஒழுங்காற்று குழு ஆணையின்படி ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும்.

நாளை காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்ற செய்தி டெல்டா பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8 தேதி டில்லியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Cauvery River
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment