பணியிடங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது ஜனம் அதிகம் பயன்படுத்தும் மூடப்பட்ட இடங்கள் கோவிட் -19 வைரஸ் பரவலுக்கு மிக முக்கிய சூழல்களாக மாறும்; இருப்பினும், பள்ளிகள் முக்கிய சூழல்கள் அல்ல; எந்தவொரு வீட்டு நோய்த்தொற்றிற்கும் குழந்தைகள் ஆதாரமாக இருக்க வாய்ப்பில்லை.
ஒன்பது நாடுகளில் உள்ள பரிமாற்ற முறைகள் குறித்த 14 ஆய்வுகளின் இந்த பொதுவான கண்டுபிடிப்புகள், நாட்டின் மூன்றாவது லாக்டவுன் முடியும் நாளான மே 17 க்கு முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சில குறிப்புகளை வழங்க முடியும்.
சீனா, ஈரான், தென் கொரியா, சிங்கப்பூர், ஐஸ்லாந்து, பிரான்ஸ், தைவான், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ள குறியீட்டு நோயாளிகள் மற்றும் தொற்றுநோய்கள் (வீடு, பொது போக்குவரத்து, பணியிடங்கள், மதக் கூட்டங்கள்) இந்த ஆய்வுகள் கண்காணித்தன.
மூடப்பட்ட பொதுக் கூடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மூடப்பட்ட இடங்கள் இடங்கள் அதிக ஆபத்து நிறைந்த சூழல்கள் என்று கூறி, அவை காற்றோட்டமான, திறந்தவெளி இடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தன.
இந்தியர்களை மீட்க சென்ற ஐ.என்.எஸ் ஜலஷ்வா மாலத்தீவை அடைந்தது!
சில ஆய்வுகள் வைரஸ் பரவுதலுக்கான பரிமாற்றத்தில் குடும்பத்தினரிடையேயான தொடர்புகள் என்பது 10-20 சதவிகிதம் என்று கண்டறியப்பட்டாலும், 5-10 சதவிகிதம் போக்குவரத்து, உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
"எங்கள் கண்டுபிடிப்புகள் COVID-19 பெரும்பாலும் நெருங்கிய தொடர்பால் பரவுகிறது, குறிப்பாக நீண்ட காலத்திலும் நெருங்கிய ஒன்று கூடும் சபையில் தொடர்பு ஏற்படும்போது வைரஸ் பரவுகிறது," என்று தி லான்செட்டில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இது சிங்கப்பூரில் ஒரு வழக்கு ஆய்வை மேற்கோளிட்டுள்ளது, அங்கு ஒரு குறியீட்டு நோயாளியின் வைரஸ் பாஸிட்டிவ், இரண்டாம் நிலை தொடர்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு தேவாலயக் கூட்டமே காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது, அதே நேரத்தில் பாஸிட்டிவ் தொடர்புகளில் 23 சதவீதம் குடும்பக் கூட்டத்திலிருந்து வந்தவை.
"நீண்டகால சமூக தொடர்புகள் நடைபெறும் நிகழ்வுகளில், மக்கள் கலந்து கொள்ளாவிட்டால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைக்கப்படலாம்" என்று அது கூறியது.
இதேபோல், பாஸ்டனில், வீடற்ற தங்குமிடம் ஒன்றில் 408 (36 சதவீதம்) குடியிருப்பாளர்களில் 147 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், ஒரு நர்சிங் ஹோமில் வசிக்கும் 89 பேரில் 57 பேர் (64 சதவீதம்) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஒரு நகரத்தின் மக்கள்தொகை அடர்த்தி சீனாவில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மெட்ராக்ஸிவ் பற்றிய ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"COVID-19 இன் தொற்றுநோய் தீவிரம் கூட்டத்தால் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே காண்பிக்கிறோம்," என்று அந்த ஆய்வு கூறியது, சீனாவில் தொற்றுநோய் பரவலான புவியியல் சூழல்களில் பரவியுள்ளது.
மற்றொரு பொதுவான ஆய்வில், வைரஸ் பரவுதில் பள்ளிகள் முக்கிய மையங்கள் அல்ல என்று கண்டறியப்படவில்லை. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு.
குழந்தைகள் மூலம் பெரியவர்களுக்கு வைரஸ் பரவியதாகவோ, வீட்டு தொற்றுநோய்க்கான ஆதாரமாக இருந்ததாகவோ கண்டறியப்படவில்லை.
ஆக்ஸ்போர்டு ஆய்வின்படி, குறியீட்டு நோயாளி - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஒரு ஆங்கிலேயர் - பிரெஞ்சு ஆல்ப்ஸில் உள்ள ஒரு அறையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார். அவரது குடியிருப்பில் 11 சுற்றுலாப் பயணிகளில் ஒன்பது பேரும், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து பேரில் மூன்று பேரும் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறியீட்டு நோயாளி வெளியேறிய பிறகு, ஐந்து புதிய சுற்றுலாப் பயணிகள் பிரதான குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்களில் சோதனை செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இருப்பினும், இரண்டாம் நிலை தொடர்புகளில் வைரஸ் உறுதியானவர்களில் ஒன்று குழந்தையாகும். அது மூன்று வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று நிறைய நபர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
"பள்ளிகளுக்குள் நெருக்கமான தொடர்புகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட குழந்தை நோயைப் பரப்பவில்லை என்பது குழந்தைகளில் வேறுபட்ட பரவல் இயக்கவியலைக் குறிக்கிறது" என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஒரு ஆஸ்திரேலிய ஆய்வான medRxiv இல், குழந்தைகள் எந்தவொரு வீட்டு நோய்த்தொற்றுக்கும் ஆதாரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கண்டறியப்பட்டது, பறவைக் காய்ச்சலுக்கு முற்றிலும் மாறாக, 54 சதவீத டிரான்ஸ்மிஷன் கிளஸ்டர்கள் குழந்தைகளை நோய்த்தொற்றின் மூலமாக அடையாளம் கண்டுள்ளன.
ஐஸ்லாந்தில், ஆயிரக்கணக்கான மக்களின் மக்கள்தொகை பரிசோதனையில் 10 வயதிற்குட்பட்ட எந்தக் குழந்தைக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பதைக் கண்டறிந்தது.
விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி
ஆயினும்கூட, COVID-19 க்கான வீட்டுப் பரிமாற்றம் குறிப்பாக SARS மற்றும் MERS ஐ விட அதிகமாக உள்ளது, குவாங்சோவை அடிப்படையாகக் கொண்ட medRxiv இல் மற்றொரு ஆய்வின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனா முழுவதிலும் இருந்து ஆக்ஸ்போர்டு வெளியிட்ட ஒரு ஆய்வில், தங்கள் சொந்த வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வேறு எந்த உறுப்பினருக்கும் இந்த நோயைப் பரப்பவில்லை என்பதைக் கண்டறிந்து, சரியான தனிமைப்படுத்தும் நெறிமுறையைப் பின்பற்றினால் வீட்டு தனிமைப்படுத்தல் சாத்தியமாகும் என்று பரிந்துரைக்கிறது.
இருப்பினும், ஆய்வுகளில் சில வேறுபாடுகள் இருந்தன. தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் வெளியிடப்பட்ட தைவானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நோய்த்தொற்றின் முக்கிய ஆதாரமாக குடும்பத்தினரிடையே பரவுதல் கண்டறியப்பட்டாலும், அமெரிக்காவின் லான்செட் ஆய்வில், வீட்டுப் பரவலைக் காட்டிலும் சுகாதாரப் பரிமாற்றம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று எக்ஸ்பிரஸ் இ-அடாவில் பேசிய எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, நாட்டில் தொற்றுநோயை மதிப்பாய்வு செய்து கண்காணிக்கும் உயர் அதிகாரிகளின் முக்கிய குழுவின் ஒரு பகுதியாக உள்ளார், அவர், இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கவலையாக உள்ளது என்று கூறியிருந்தார்.
லாக் டவுனுக்கு பிறகு பொது இடங்களைப் பற்றி அவர் பேசுகையில், “விருந்தோம்பல், பொழுதுபோக்கு, விமான நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு தொழில்களில் பெரும் விளைவுகள் இருக்கும். சமூக தூரத்துடன் நாம் எவ்வாறு பயணிக்கிறோம்? நாம் சில இருக்கைகளை காலியாக விடுகிறோமா? பேருந்துகள் மற்றும் ரயில்களில் நாம் எவ்வாறு அமர்வது? பெருநகரங்களுக்கு என வேறு ஒரு உத்தி தேவை. மைக்ரோ திட்டமிடல் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.