Advertisment

தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதில் தீவிரம் காட்டும் ராகுல்!... புதிய தலைவர் யார்?

கட்சியினை சீரமைக்கும் முழுப் பொறுப்பினை ராகுல் காந்திக்கு வழங்கினால் அவருடைய முடிவில் மாற்றம் ஏற்படலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress Party President Rahul Gandhi resigns, Congress President Rahul Gandhi Stepping down, Priyanka Gandhi

Congress Party President Rahul Gandhi resigns

Manoj C G

Advertisment

Congress President Rahul Gandhi Stepping down : 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக அமையாத காரணத்தால், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிவித்தார்.

ஆனால் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி மறுத்துவிட்டார். ஆனால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதில் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார் ராகுல் காந்தி. என்னைவிட மிகச் சிறந்த ஒருவரை காங்கிரஸ் கமிட்டி தேர்வு செய்யும் வரையில் பொறுப்பில் இருப்பதாகவும், பின்னர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால் தற்போது நிலவி வரும் குழப்பம், மூத்த தலைவர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவினை ராகுல் எடுக்காமல் இருப்பதே நலம் என்று சில தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : தேர்தல் தோல்விகளுக்கு மூத்த தலைவர்களே காரணம்... சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு விவாதித்த ராகுல் காந்தி

மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தும் முடிவில் பிடிவாதமாய் நிற்கும் ராகுல் காந்தி

ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைமைகளும் கட்சிகளின் தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த செயலின் மூலம் கட்சியின் உள்ளமைப்புகளை மாற்றி அமைப்பதற்கு ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பினை வழங்குவதோடு, அவர்கள் ராகுல் காந்தியின் முடிவினை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார், பஞ்சாபின் சுனில் ஜக்கார், அசாமின் ரிபின் போரா, மகாராஷ்ட்ராவின் அசோக் சவான் போன்ற தலைவர்கள் தற்போது தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கின்றார்கள்.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் அகமது பட்டேல் மற்றும் பொதுச்செய்லாளர் கே.சி.வேணுகோபால் ராகுல் காந்தியை சந்திக்கச் சென்றனர். ஆனால் ராகுல் காந்தியின் முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நாடாளுமன்ற காங்கிரஸ் குழுவிற்கு தலைவராகவும், கட்சியை மறுசீராய்வு செய்து கட்டமைப்பதற்காகவும் விரையில் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க : இந்திய நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் அரசியல் வாரிசுகள்… காரணம் என்ன?

இது குறித்து ஏற்கனவே காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி பேசிய போதும், அவருடைய முடிவினை பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது போன்ற ஒரு இக்கட்டான நிலையில் கட்சியில் இருந்து வெளியேறுவது நல்லதல்ல என்றும் அவர்கள் கருத்துகளை வழங்கியுள்ளனர்.

கட்சியினை சீரமைக்கும் முழுப் பொறுப்பினை ராகுல் காந்திக்கு வழங்கினால் அவருடைய முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் சில தலைவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு மத்தியில் ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கும், கர்நாடகாவில் இருக்கும் ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கும் பல்வேறு பிரச்சனைகள் வந்துள்ளன. ராஜஸ்தானில் அசோக் கேலாட் குறித்து இரண்டு அமைச்சர்கள் தங்களின் கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த சர்ச்சகைகள் அனைத்தும், காங்கிரஸ் தலைவர், மூத்த தலைவர்கள் தங்களின் வாரிசுகளை இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும்மாறு வற்புறுத்தியதும் முக்கிய காரணம் என்று கூறிய பின்பு உருவானது தான்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்றது கட்சி சார்பான விவாதங்கள். அதற்கு மதிப்பளியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் மூத்த தலைவர்கள் மீது ராகுல் காந்தி அளித்த புகார் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment