Advertisment

2வது அலை: இந்திய கிராமப்புறத்தை தாக்கிய கோவிட்; தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகம்

243 மாவட்டங்களில் மே 5ம் தேதி நிலவரப்படி 39.16 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது செப்டம்பர் 16, 2020 அன்று முதல் அலை உச்சத்தில் இருந்தபோது பதிவான 9.5 லட்சம் தொற்றுகளைவிட நான்கு மடங்கு அதிகம்.

author-image
WebDesk
New Update
corona virus second wave, covid second wave, Covid hits rural India, கொரோனா வைரஸ், கொரோனா 2வது அலை, கிராமப்புங்களை தாக்கிய கோவிட், தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகம், இந்தியா, cases and deaths quadruple, brgf, covid 19, india

கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் இந்தியாவின் கிராமப்புறங்களில் தொற்றுகள் அதிகரித்து வருவதாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட முதல் உச்சத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவின் உள்நாட்டு அல்லது பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Advertisment

பின்தங்கிய பிராந்தியங்களின் மானிய நிதியத்தின் (பி.ஆர்.ஜி.எஃப்) கீழ் வரும் மாவட்டங்களில் - 272 மாவட்டங்களில் தரவுகள் கிடைக்கக்கூடிய 243 மாவட்டங்களில் - மே 5ம் தேதி நிலவரப்படி 39.16 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது செப்டம்பர் 16, 2020 அன்று முதல் அலை உச்சத்தில் இருந்தபோது பதிவான 9.5 லட்சம் தொற்றுகளைவிட நான்கு மடங்கு அதிகம்.

இந்த மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டாவது அலையிலும் மிக அதிகமாக உள்ளது. அது இன்னும் உச்சத்திற்கு செல்லவில்லை. இப்போது சிகிச்சையில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை முதல் அலை உச்சத்தில் இருந்தபோது சிகிச்சையில் இருந்த தொற்றுகளின் எண்ணிக்கையைவிட 4.2 மடங்கு அதிகமாகும். இந்த மாவட்டங்களில் 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கிராமப்புற மாவட்டங்களில் துணை சுகாதார உள்கட்டமைப்பை தீவிர அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ள இறப்புகளில் இது பிரதிபலிக்கிறது. மே 5, தேதிக்குள், 243 மாவட்டங்களும் சேர்ந்து 36,523 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. இது கடந்த ஆண்டு முதல் அலையின் உச்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகம்.

இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 16, 2020 அன்று தொற்றால் இறந்தவர்களின் எண்ணிகை 9,555 ஆக பதிவாகி உள்ளது.

பி.ஆர்.ஜி.எஃப்-ன் கீழ் வரும் 272 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 54 சதவீதம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவை: பீகார் - 38, உத்தரபிரதேசம் - 35, மத்தியப் பிரதேசம் - 30, ஜார்க்கண்ட் - 23 மற்றும் ஒடிசா - 20 ஆகும். இந்த மாநிலங்கள் நாட்டின் மத்திய நகர்ப்புறங்களுக்கு தொழிலாளர் சக்தி அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுகளில் நேரடியாக கிடைக்கிற தரவுகளில் நகர்ப்புறம் - கிராமப்புறம் என்று பிரிவு இல்லை என்றாலும், பி.ஆர்.ஜி.எஃப் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய பகுப்பாய்வு இந்த 272 மாவட்டங்கள் முதன்மையான கிராமப்புறங்களாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வளர்ச்சியுடனும் இருப்பதால் தொற்றுநோய் கிராமப்புறங்களில் பரவுதலைக் குறிக்கிறது.

முதல் மற்றும் இரண்டாவது அலைகளுக்கு இடையில் 243 மாவட்டங்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால். நாட்டில் மொத்த தொற்றுகளின் சதவீதத்தில் அது 18.6 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மாவட்டங்களில் இருந்து இறப்புகளின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதிக்குள், இந்த மாவட்டங்களில் உயிரிழப்புகள் தேசிய இறப்பு எண்ணிக்கை 83,198-ல் 11.5 சதவீதமாக உள்ளது. இருப்பினும், மே 5 அன்று இந்த பங்களிப்பு 16 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த 272 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் அடிப்படை சுகாதார வசதிகளை மட்டுமே வழங்குகின்றன. மாநிலங்களால் உருவாக்கப்படும் புதிய உள்கட்டமைப்பு பெரும்பாலும் பெரிய நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ளது. இதன் விளைவாக, இந்த மாவட்டங்களில் இருந்து அருகிலுள்ள பெரிய நகரத்திற்கு நோயாளிகள் பெருமளவில் வருகிறார்கள். இது நகரங்கள் மற்றும் நகரங்களில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட உள்கட்டமைப்பின் மீது மேலும் சுமையைக் கூட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Covid 19 Corona Second Wave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment