Advertisment

சென்னையில் 202 பகுதிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பு: ராயபுரத்தில் அதிகம்

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அனைத்துப் பள்ளிகளையும் மே 2-க்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

Covid-19 Cases Update : மே மாதம், 3ம் தேதிக்குப் பின், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது நிபந்தனைகளுடன் தளர்த்துவதா என்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை, 17 ம் தேதி வரை தொடரலாம் என்றும், குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என்றும் பெரும்பாலான முதல்வர்கள் தெரிவித்தனர்.

Advertisment

அப்போது, ''தொற்று அதிகம் உள்ள சிவப்பு நிறமிடப்பட்டுள்ள பகுதிகளை, பாதிப்பு குறைந்த ஆரஞ்சு நிறப் பகுதிகளாகவும், தொடர்ந்து அவற்றை, பாதிப்பு முற்றிலும் நீங்கிய பச்சை நிறப் பகுதிகளாகவும் மாற்றும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும்,'' என அவர்களிடம், மோடி கேட்டுக் கொண்டார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில், ஐந்து மாநகராட்சிகளில், அமல்படுத்தப்பட்டுள்ள முழுமையான ஊரடங்கு, . எதிர்பார்த்ததை விட, இது அதிக பலனை தந்துள்ளதால், அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளிலும், முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், நகரப் பகுதிகளில் தான், நோய் தொற்று அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக, சென்னையில், தினமும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பாதிக்கப்பட்ட, 52 பேரில், 47 பேர், சென்னைவாசிகள்; நான்கு பேர், மதுரையைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்.'நகரங்களில், ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்' என, மருத்துவ வல்லுனர்கள், அரசிடம் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:48 (IST)28 Apr 2020

    393 பேருக்கு கொரோனா

    மும்பையில் இன்று 393 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,982 ஆனது;

    பலியானவர்கள் 244ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,234ஆகவும் உயர்வு..

    22:48 (IST)28 Apr 2020

    புனேயில் இன்று 3 பேர் பலி

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,491 ஆக உயர்வு;

    பலியானவர்கள் எண்ணிக்கை 83ஆக உயர்வு..

    22:26 (IST)28 Apr 2020

    எண்ணிக்கை 3,774 ஆக அதிகரிப்பு

    குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;

    அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,774 ஆக அதிகரிப்பு.

    22:03 (IST)28 Apr 2020

    கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளருக்கு கொரோனா

    கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியான கூலித்தொழிலாளி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    21:48 (IST)28 Apr 2020

    சென்னை மாநகராட்சி ஆணையர் அவசர ஆலோசனை

    கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், பணியாளர்களுடன் ஆணையர் பிரகாஷ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    21:24 (IST)28 Apr 2020

    லஞ்சம் வாங்கிய காவலர் சஸ்பென்ட்

    நெல்லை பழைய பேட்டையில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய குற்றசாட்டில் காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் உத்தரவு.

    21:08 (IST)28 Apr 2020

    இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இன்று காலை முதல்நிலை காவலருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    20:59 (IST)28 Apr 2020

    தனியார் மருத்துவமனைகள் செயல்பட அறிவுறுத்தல்

    கொரோனா தொற்று இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் செயல்பட அறிவுறுத்தல்

    - மத்திய சுகாதாரத்துறை

    20:53 (IST)28 Apr 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது - குணமடைந்தவர்கள் சதவிகிதம் 23.3% ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்​தியாவில் ​இதுவரை மொத்தம் 6,868 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் குணம் குணமாகி உள்ளதாகவும் கூறினார். ஐ.சி.எம்.ஆர். ஆய்வு முடிவை அறிவிக்கும் வரையிலும், பிளாஸ்மா சிகிச்சையை சோதனை நோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    20:37 (IST)28 Apr 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காணொலி மூலம் ஆலோசனை

    பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவினருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காணொலி மூலம் ஆலோசனை

    தமிழகத்தில் காலியாக உள்ள 2 துணைவேந்தர் பணியிடங்களுக்கு நேர்மையான, திறமையான நபர்களை பரிந்துரைக்க ஆளுநர் உத்தரவு

    20:22 (IST)28 Apr 2020

    தாராவியை மிரட்டும் கொரோனா

    மும்பை தாராவியில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு;

    இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 330ஆக அதிகரித்தது..

    பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது..

    20:22 (IST)28 Apr 2020

    ராயபுரம் மண்டலத்தில்...

    சென்னையில் கொரோனா பாதித்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் 202 பகுதிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 53 பகுதிகள் உள்ளது!

    நேற்று 168 பகுதிகளாக இருந்த நிலையில், இன்று 202ஆக உயர்வு - சென்னை மாநகராட்சி

    20:11 (IST)28 Apr 2020

    1 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா

    சென்னையில் பிறந்து 7 மாதமான ஆண் குழந்தை, 1 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை என 3 குழந்தைகளுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

    19:46 (IST)28 Apr 2020

    ஒரே நாளில் 7,093 மாதிரிகள் சோதனை

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது..

    இன்று ஒரே நாளில் 7,093 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது;

    இதுவரை 1,01,874 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

    19:39 (IST)28 Apr 2020

    இன்றைய கொரோனா பாதிப்பு - தமிழக நிலவரம்

    மொத்த பாதிப்பு - 2,058

    இன்று உறுதியானவர்கள் - 121

    குணமடைந்தவர்கள் - 1,128

    உயிரிழப்பு - 25

    சிகிச்சை பெறுபவர்கள் - 902

    மொத்த பரிசோதனைகள் - 1,01,874

    இன்றைய பரிசோதனைகள் - 7,093

    பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் - 1,392

    பெண்கள் - 666

    19:15 (IST)28 Apr 2020

    முதல் 5 மாவட்டங்கள்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்!

    சென்னை - 673

    கோவை - 141

    திருப்பூர் - 112

    திண்டுக்கல் - 80

    மதுரை - 79

    19:06 (IST)28 Apr 2020

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,128

    தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,128ஆக உயர்வு!

    தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்தது!

    18:39 (IST)28 Apr 2020

    சென்னையில் 673...

    சென்னையில் 600ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

    சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்தது.

    இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது..

    18:36 (IST)28 Apr 2020

    பாதிப்பு 2,000ஐ கடந்தது

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,000ஐ கடந்தது

    இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

    இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக அதிகரித்தது!

    18:26 (IST)28 Apr 2020

    ஓமலூர் சுற்று வட்டாரங்களில் கொரோனா வைரஸ் அச்சம் - கல், முள் கொண்டு சாலைகள் துண்டிப்பு

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊருக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்ற அச்சத்தால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை முள் மற்றும் கல் கொண்டு அடைத்துள்ளனர். இதனால் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ஓமலூர் வழியாக சேலம் சென்று வருபவர்கள் போலீசார் அதிக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    18:04 (IST)28 Apr 2020

    கொரோனா எண்ணிக்கை 29,974ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர் - 937 பேர் உயிரிழப்பு

    18:03 (IST)28 Apr 2020

    சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு

    டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு

    கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்

    17:48 (IST)28 Apr 2020

    வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவ வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வளைகுடா நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் பலர் தாயகம் திரும்பிட விரும்புகிறார்கள் என்பது, அவர்களுடன் நடத்திய காணொலி உரையாடலின் வாயிலாகத் தெரியவந்ததாக கூறியுள்ளார். வெளிநாடுகளில் தவிக்கும் மாநில மக்களை,மத்திய அரசோடு இணைந்து, கேரளா அரசு எப்படி மீட்டு கொண்டு வர திட்டமிட்டுள்ளதோ, அதே போல், தமிழக அரசும், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    17:12 (IST)28 Apr 2020

    கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம்

    சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

    16:26 (IST)28 Apr 2020

    மே-3ம் தேதிக்கு பிறகு பொது முடக்கம் தளர்த்தப்படுமா? - மீண்டும் இயங்குவதற்கு தயாராகும் ரயில் நிலையங்கள்

    கொரோனா பொது முடக்கம் மே 3-ம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்கம் தளர்த்தப்பட்டால், ரயில் பயணிகள் சமூக விலகலை பின்பற்றி பயணிக்கும் வகையில், அனைத்து ரயில்நிலையங்களும் மீண்டும் செயல்படுவதற்கு தயாராகி வருகின்றன. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் 6 அடி இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், டிக்கெட் கவுண்டர்களில் 6 அடி இடைவெளியில் கோடுகள் போடப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுவதற்கு இந்த ஏற்பாடு என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    16:12 (IST)28 Apr 2020

    கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பதிவாகாத 80 மாவட்டங்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை, கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக தொற்று பதிவாகவில்லை. கடந்த 14 நாட்களில், 47 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை. கடந்த 21 நாட்களில், 39 மாவட்டங்களிலும், 28 நாட்களாக 17 மாவட்டங்களில் கொரோனாவால் யாரையும் பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

    16:06 (IST)28 Apr 2020

    மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி; பிடிக்க வந்த காவலர்களுக்கு மிரட்டல்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி, பிடிக்க வந்த காவலர்களிடம் அருகே வந்தால் கட்டிப்பிடித்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    15:33 (IST)28 Apr 2020

    லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்த; சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டல்

    கொரோனா வைரஸ் தொற்றின் மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலைத் தேர்வு செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    15:26 (IST)28 Apr 2020

    நாமக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கி; ஊழியர்களுடன் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

    நாமக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்; ஊழியர்களையும் வங்கிக்குள் வைத்து பூட்டி சீல் வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    14:50 (IST)28 Apr 2020

    அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.” என்று தெரிவித்துள்ளார்.

    14:20 (IST)28 Apr 2020

    ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்: இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தயாரிக்கப்படும். ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்ததும் இந்தியாவில் ரேபிட் டெஸ் கிட் கருவிகள் தயாரிப்பு தொடங்கும். ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்தால் மே31-ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரேபிட் டெஸ் கிட் கருவிகள் தயாரிக்க முடியும்” என்று கூறினார்.

    13:46 (IST)28 Apr 2020

    அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைத்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம்

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெருக்கடியான நேரத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. * இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல” என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    13:32 (IST)28 Apr 2020

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடைக்காரருக்கு கொரோனா; வியாபாரிகளுக்கு பரிசோதனை

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து வியாபாரிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள், நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

    12:41 (IST)28 Apr 2020

    தமிழக அரசுக்கு பா.ஜ., தலைவர் முருகன் கோரிக்கை

    தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 32 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த சிறந்த வாய்ப்பாக கருதுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

    12:14 (IST)28 Apr 2020

    கொரோனா - மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 27 பேர் மரணம்

    மகாராஷ்டிராவில் இன்று ( ஏப்ரல் 28ம் தேதி) மட்டும் புதிதாக 522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றுமட்டும் அம்மாநிலத்தில் 27 பேர் கொரோனா பாதிப்பிற்கு மரணமடைந்துள்ளனர்.

    12:02 (IST)28 Apr 2020

    சென்னையில் 2 போலீசாருக்கு கொரோனா

    சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்டேசனில் உள்ள மற்ற போலீசாருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    11:41 (IST)28 Apr 2020

    மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

    ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், நாளை ( ஏப்ரல் 29ம் தேதி), மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

    11:25 (IST)28 Apr 2020

    250 கடைகளுக்கு மட்டுமே அனுமதி – சிஎம்டிஏ

    சென்னை கோயம்பேட்டில் 3,100 கடைகளில் 250 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.  இந்த 250 கடைகளிலும் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும் என்று சிஎம்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

    11:04 (IST)28 Apr 2020

    கோயம்பேடு சந்தை இடமாற்ற ஆலோசனை கூட்டம்

    சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது எதிரொலியாக இந்த சந்தை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த  சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    10:57 (IST)28 Apr 2020

    கொரோனா பாதிப்பு மரணங்கள் அடிப்படையிலான மாநிலங்களின் பட்டியல்

    கொரோனா பாதிப்பு மரணங்கள் அடிப்படையிலான மாநிலங்களின் பட்டியல்

    publive-image

    10:35 (IST)28 Apr 2020

    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதிக்கு சீல்

    திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை * மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். . பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளியே செல்லும் போது நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    10:12 (IST)28 Apr 2020

    முதல்வர் பழனிசாமி தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்

    மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதல்வர் பழனிசாமி  தலைமையில் தொடங்கியது

    10:00 (IST)28 Apr 2020

    சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    publive-image

    09:38 (IST)28 Apr 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச நாடுகளில் அதிகளவில் உயிர்ப்பலிகளை வாங்கியுள்ளது.

    அமெரிக்கா - 56,803

    இத்தாலி - 26,977

    ஸ்பெயின் - 23,521

    பிரான்ஸ் - 23,293

    பிரிட்டன் - 21,092

    ஜெர்மனி - 6,126

    ஈரான் - 5,806

    09:31 (IST)28 Apr 2020

    29,435 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. 934 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : கொரோனா பரிசோதனைக்கு பயன்படும், 'ரேபிட் கிட்ஸ்' கருவி கொள்முதலில் பெரும் ஊழல் நடப்பதாகவும், பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படியும், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழக அரசு வாங்கிய, 24 ஆயிரம், 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதில், அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu Corona Virus Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment