Advertisment

சென்னை மாநகர பஸ்கள் இன்று திருச்சி வரை இயக்கம்: நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு கொண்டு வரப்படுவதால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, சென்னை மாநகர பஸ்கள் திருச்சி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus pandemic, tamil nadu, 144 imposition, buses

coronavirus, coronavirus pandemic, tamil nadu, 144 imposition, buses

தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு கொண்டு வரப்படுவதால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, சென்னை மாநகர பஸ்கள் திருச்சி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலர் உள்ளிட்டோர், ஆலோசனை நடத்தினர். இதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, மார்ச், 31 வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள, 75 மாவட்டங்களின் எல்லைக்கு, 'சீல்' வைக்கப்படுவதாகவும், இந்த மாவட்டங்களில் மக்கள் ஊரடங்கை, இந்த மாத இறுதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:14 (IST)23 Mar 2020

    திருப்பூர் மதுரை நபர் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

    தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    சென்னை புரசைவாக்கம், திருப்பூர், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    21:09 (IST)23 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

    டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது.

    பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும்.

    உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி; ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    21:09 (IST)23 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடு

    கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

    கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை விதித்துள்ளது.

    21:04 (IST)23 Mar 2020

    மார்ச் 26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

    தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

    வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

    20:13 (IST)23 Mar 2020

    வீட்டில் இருந்து சமூக விலகலை பின்பற்றுவதே கொரோனா வைரஸை எதிர்க்கும் வழி - பிரதமர்

    வீட்டில் இருந்து சமூக விலகலை பின்பற்றுவதே கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்க்கும் வழி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    19:43 (IST)23 Mar 2020

    தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என அறிவிப்பு

    அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும். +1, +2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், +1, +2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும். தேர்வு மையத்திற்கு செல்ல தேர்வர்கள் போக்குவரத்து வசதி கோரினால் செய்து தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    19:40 (IST)23 Mar 2020

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

    சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

    மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    19:15 (IST)23 Mar 2020

    144 தடை உத்தரவை அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.

    18:28 (IST)23 Mar 2020

    சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊடகங்களிடம் கூறுகையில், “விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

    17:21 (IST)23 Mar 2020

    நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை - உச்ச நீதிமன்றம்

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    17:10 (IST)23 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை: 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு - மத்திய சுகாதாரத்துறை

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக யூனியன் பிரதேசங்கள் உட்பட 19 மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    16:56 (IST)23 Mar 2020

    நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து

    கொரோனா வைரஸ் பரலவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து.

    16:29 (IST)23 Mar 2020

    கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தமிழகத்தில் 2 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி

    கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தமிழகத்தில் 2 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, சென்னை அப்பல்லோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    16:25 (IST)23 Mar 2020

    கொரோனா பாதித்த தாய்லாந்து நாட்டவருடன் தொடர்பில் இருந்த 696 பேர் வீட்டில் இருக்க அறிவுறுத்தல்

    தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவருடன் தொடர்பிலிருந்த ஈரோட்டைச் சேர்ந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

    15:48 (IST)23 Mar 2020

    குடிநீர் தேவை காரணமாக லைசென்ஸ் இல்லாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி

    கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம்

    உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

    14:59 (IST)23 Mar 2020

    கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் - முதல்வர்

    கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் - முதல்வர் பழனிசாமி

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு

    மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    14:23 (IST)23 Mar 2020

    கொரோனா பீதி : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

    வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள், வெளிநாட்டினர் பொதுவெளியில் நடமாடினால், அவர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டு விசாக்களை ரத்து செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில், அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:38 (IST)23 Mar 2020

    ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது சிறைத்தண்டனை

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளிட்ட தேசிய அளவில் 80 மாவட்டங்களுக்கு வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள விதிகளை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    12:50 (IST)23 Mar 2020

    அவசர உதவி எண் 1075 – சுகாதாரத்துறை அறிவிப்பு

    கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த கேள்விகள், ஆலோசனை மற்றும் உதவிக்கு தேசிய அளவிலான கட்டணமில்லா 24 மணிநேர உதவி எண் 1075-ஐ அழையுங்கள்.

    12:18 (IST)23 Mar 2020

    கொரோனா அச்சறுத்தல் - தள்ளிப்போகிறது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்?

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 26ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களை உறுப்பினர் தேர்தலை தள்ளிவைக்க இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏப்ரலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    12:07 (IST)23 Mar 2020

    கொரோனா அச்சுறுத்தல் : உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை கிடையாது

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, உச்சநீதிமன்றத்தில் நேரடியான விசாரணை கிடையாது. வசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் அறைகளுக்கு  நாளை மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    11:33 (IST)23 Mar 2020

    இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக  81 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் ( ICMR) தெரிவித்துள்ளது. ICMR, மார்ச் 23ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    publive-image

    10:37 (IST)23 Mar 2020

    விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    10:23 (IST)23 Mar 2020

    கொரோனா வைரஸ் - குஜராத்தில் ஒருவர் பலி - 29 பேருக்கு பாதிப்பு

    குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். 29 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    publive-image

    10:20 (IST)23 Mar 2020

    நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பெரும்பாலான மக்கள் உதாசீனப்படுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. தங்களை பாதுகாத்துக்கொண்டு தங்களை சார்ந்தவர்களையும் இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு நான் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். மாநில அரசுகளும் இதுதொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளை தவறாது கடைபிடிக்கவேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    10:13 (IST)23 Mar 2020

    விமான சேவையை நிறுத்தியது யுஏஇ

    சவுதி அரபியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரி்தது வரும் நிலையில், அதை தடுக்கும் நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பயணிகள் விமான சேவையை அதிரடியாக நிறுத்தியுள்ளது.

    10:12 (IST)23 Mar 2020

    சுய தனிமையில் ஜெர்மன் சாஞ்சலர் மெர்கெல்

    கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது ஜெர்மனி. அந்நாட்டின் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல், சுயமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.

    09:35 (IST)23 Mar 2020

    390 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:29 (IST)23 Mar 2020

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

    09:15 (IST)23 Mar 2020

    வெளி மாவட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபை வரவேண்டாம் - திமுக உத்தரவு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,வெளிமாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இன்று முதல் சட்டசபைக்கு வர வேண்டாம் என்று திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:06 (IST)23 Mar 2020

    முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

    கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Corona latest news updates : அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 33,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 419 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 14,613 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 ஆனது. அங்கு 59.138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    Tamil Nadu Chennai Coronavirus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment