Advertisment

பசுவை தேசிய விலங்காக அறிவித்து அடிப்படை உரிமைகள் அளிக்க வேண்டும் - அலகாபாத் ஐகோர்ட்

அலகாபாத் உயர் நீதிமன்றம், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுவை போற்றினால் மட்டுமே நாடு செழிக்கும் என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Cow should be declared national animal, cow national animal, india, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், பசுவுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்க வேண்டும், அலகாபாத் உயர் நீதிமன்றம், பசு பாதுகாப்பு, given fundamental rights to cow, Allahabad High Court, Allahabad High Court oreder, cow protection

பசு இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி அதை புறக்கணிக்க முடியாது என்றும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை கூறியுள்ளது.

Advertisment

உத்தரபிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ​​பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

“பசுப் பாதுகாப்பு என்பது ஒரு மதப் பிரிவினரின் வேலை மட்டுமல்ல, பசு இந்தியாவின் கலாச்சாரம். கலாச்சாரத்தைக் காப்பாற்றும் பணி மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பார் மற்றும் பெஞ்சின் கருத்துப்படி, நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: பசுவை போற்றினால் மட்டுமே நாடு செழிக்கும் என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அவர்கள் வித்தியாசமாக வழிபடலாம், ஆனால், அவர்களின் சிந்தனை நாட்டிற்காக ஒரே சிந்தனை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஜாமீனை மறுத்து, நீதிமன்றம் மேலும் கூறுகையில், இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவை ஒன்றிணைத்து அதன் நம்பிக்கையை ஆதரிக்க ஒவ்வொருவரும் ஒரு படி மேலே செல்லும்போது, ​​சில மக்கள் மதமும் நம்பிக்கையும் நாட்டின் நலனில் சிறிதும் இல்லை. நாட்டில் இது போல பேசப்படுவதால் அவர்கள் மட்டுமே நாட்டை பலவீனமடைய செய்கிறார்கள். மேற்கூறிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரருக்கு எதிராக முதன்மை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு இதே போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அது சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

பார் அண்ட் பெஞ்ச் குறிப்பிடுகையில், உத்தரபிரதேசத்தில் செயல்படும் கோசாலைகள் குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது. நீதிமன்றம் கூறியதாவது: “அரசு கோசாலைகளைக் கட்டுகிறது. ஆனால், பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை. அதுபோலவே, தனியார் கோசாலைகளும் இன்று வெறும் போலித்தனமாக மாறிவிட்டன. அதில் மக்கள் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று, பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் அரசாங்கத்திடமிருந்து உதவி பெறுகிறார்கள். ஆனால், அதை தங்கள் சொந்த நலனுக்காக செலவிடுகிறார்கள். பசுவை கவனித்துக்கொள்வதில்லை.” என்று கூறியுள்ளது.

India Uttar Pradesh Cow Protection
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment