Advertisment

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021ல் 15.3% அதிகரிப்பு: சென்னை எந்த இடத்தில் இருக்கிறது?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020ல் 56.5 சதவீதத்தில் இருந்து, 2021ல் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி அறிக்கை காட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crime against women

Crime against women rose by 15.3% in 2021: NCRB

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் 3,71,503 வழக்குகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விகிதம் (1 லட்சம் மக்கள்தொகைக்கு நடக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை) 2020ல் 56.5 சதவீதத்தில் இருந்து 2021ல் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி அறிக்கை காட்டுகிறது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை (31.8 சதவீதம்) "கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல்" என்ற வகையிலும், அதைத் தொடர்ந்து உள்நோக்கத்துடன் பெண்கள் மீதான தாக்குதல் (20.8 சதவீதம்), கடத்தல் (17.6 சதவீதம்), மற்றும் கற்பழிப்பு (7.4 சதவீதம்) குற்றங்கள் அடங்கும்.

அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகபட்ச விகிதம் அஸ்ஸாமில் (168.3 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சிறிய சரிவு இருந்தபோதிலும், கடந்த ஆண்டு இதுபோன்ற 29,000 வழக்குகள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரிவில் உள்ள மற்ற முன்னணி மாநிலங்களில் ஒடிசா, ஹரியானா, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.

அசாம் போலவே ராஜஸ்தானிலும் வழக்குகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது, அதேநேரம், ஒடிசா, ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

2021 இல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் (56,083) இருக்கிறது, இருப்பினும் விகிதம் 50.5 சதவீதம் குறைவாக உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

publive-image

2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கற்பழிப்பு விகிதம்(16.4 சதவீதம்) அதிகமாக இருந்தது, அங்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 6,337 வழக்குகளுடன் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. (எக்ஸ்பிரஸ்)

கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடன் நாகாலாந்து தனித்து நிற்கிறது - 2019 இல் 43, 2020 இல் 39 மற்றும் 2021 இல் 54 வழக்குகள் அங்கு பதிவாகியுள்ளன.

யூனியன் பிரதேசங்களில், 2021 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 147.6 சதவீதத்துடன் டெல்லியில் தான் அதிகம். பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையிலும் இது முதலிடத்தில் உள்ளது, அங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 2019 இல் 13,395 இல் இருந்து 2021 இல் 14,277 ஆக அதிகரித்துள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு முழுவதும் உள்ள 19 நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தரவுகளையும் என்சிஆர்பி திரட்டுகிறது.

இந்த நகரங்களில், 2021 தரவுகள்படி ஜெய்ப்பூர் 194 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து டெல்லி, இந்தூர் மற்றும் லக்னோ உள்ளன. தமிழ்நாட்டில் - சென்னை மற்றும் கோயம்புத்தூர் - இரண்டும் - குறைந்த விகிதத்தைக் கொண்டிருந்தன.

இந்த நகரங்களில், 2021 ஆம் ஆண்டில் டெல்லி முதலிடத்தைப் பிடித்தது (13,982) அதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளன. 2019 இல் 12,902 மற்றும் 2020 இல் 9,782 என இந்த நகரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் 2021 ஆம் ஆண்டில் (16.4%) கற்பழிப்பு விகிதம் அதிகமாக இருந்தது மற்றும் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 6,337 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த ஆண்டு 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ராஜஸ்தானில் அதிக மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், அங்கு 2021 ஆம் ஆண்டில் 1,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு நாட்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2018 இல் 33,977 வழக்குகளில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறிய சரிவைக் குறிக்கிறது.

2017 ஆம் ஆண்டு முதல் என்சிஆர்பி தரவுபடி, கூட்டு பலாத்காரம்/கற்பழிப்புடன் கூடிய கொலை" வழக்குகள் -2019 இல் இருந்ததைப் போலவே,  2021 இல் 284 வழக்குகள் உடன் சீராக உள்ளன. 2020 ஆம் ஆண்டில், இதுபோன்ற 218 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வகையின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் (291) 2018 இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக உ.பி.யில் 48 வழக்குகளும், அசாமில் 46 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பீகார், அருணாச்சலப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

என்சிஆர்பி தரவுகளின்படி, ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் மொத்த கற்பழிப்பு-கொலைகள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.

இந்த வழக்குகளில், 2017-2020 க்கு இடைப்பட்ட என்சிஆர்பி தரவு, 2017-2020 காலப்பகுதியில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கற்பழிப்பு-கொலை வழக்குகள் உ.பி., அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருப்பதாகக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு 28,000 க்கும் மேற்பட்ட பெண்கள் "திருமணத்தில் நிர்ப்பந்திக்க" கடத்தப்பட்டனர், இதில் 12,000 சிறார்கள் உட்பட, அதிகபட்சமாக 8,599 வழக்குகள் உ.பி.யில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து பீகாரில் (6,589), என்சிஆர்பி அறிக்கை காட்டுகிறது.

2021 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நாட்டில் 507 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன -  இது பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் 0.1 சதவீதம் ஆகும். கேரளாவில் அதிக வழக்குகள் (270) பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கடந்த ஆண்டு 6,589 வரதட்சணை இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உ.பி மற்றும் பீகாரில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment