Advertisment

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்!

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்!

இஸ்ரோவால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட், மாலை 5:28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Advertisment

இந்த ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளுகிறது.

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும். இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இவ்வளவு அதிக எடை கொண்ட செயற்கைகோளை முதன்முறையாக இஸ்ரோ இன்று ஏவுவது குறிப்பிடத்தக்கது.

Isro Sriharikota
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment