பாஜக இதுவரை பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாத கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுடன் நல்லுறவை உருவாக்குமாறு பாஜக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில் கேரளாவில் தற்போது அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவகாரத்தை முன்னெடுத்து செல்வதில், மாநில தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் தலைவர்களை சந்திப்பதில் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். தேசிய தலைமை அதை கையாளும் என்று கூறிய நிலையில், சந்தோஷின் சந்திப்பு நடந்ததுள்ளது. சந்தோஷ் இந்த முயற்சி எடுப்பதன் மூலம், கேரளாவில் கிறிஸ்தவ-இந்து ஒருங்கிணைப்பை உருவாக்கும் பாஜகவின் கனவு இறுதியாக வடிவம் பெறும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா தேர்தல் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் துறை செயலாளர் மனோஜ் அஹுஜா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயிர் உற்பத்தி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். கரந்த்லாஜேவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் பயிர் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை வலுப்படுத்த ஆளும் பாஜக முயற்சித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil