Advertisment

டெல்லி ரகசியம்; மோடிக்கு பிடித்த முதல்வர் யார் தெரியுமா?

பா.ஜ.க.,வைச் சேர்ந்த மூன்று முதல்வர்கள் தங்களது செயல்பாடுகளால் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர்கள் யார் என்று யூகிக்க முடிகிறதா?

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்; மோடிக்கு பிடித்த முதல்வர் யார் தெரியுமா?

Delhi Confidential: Any guesses who PM Narendra Modi’s favourite Chief Ministers are?: மீண்டும் சலசலப்பு: சில நாட்களாக வெறிச்சோடியிருந்த பா.ஜ.க தலைமையகம் புதன்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பொதுச் செயலர் சுனில் பன்சால் தனது அலுவலகத்தை வந்தடைந்தபோது சுறுசுறுப்பாகவும், உயிரோட்டமாகவும் மாறியது. ஆகஸ்ட் 10 அன்று உத்தரபிரதேசத்தில் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களுக்குப் பொறுப்பான தேசிய பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்ட உடனேயே கொரோனா தொற்று பாதித்த சுனில் பன்சால், நேற்று முதல் முறையாக அலுவலகத்தின் இரண்டாவது மாடிக்கு வந்தார். செல்வாக்கு மிக்க தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமானோர் பூங்கொத்துகளுடன் வரிசையில் நின்றனர். பன்சால் அலுவலகத்தில் சில மணி நேரம் செலவிட்டு சில விவாதங்களையும் நடத்தினார்.

Advertisment

இதையும் படியுங்கள்: பில்கிஸ் பானு, பெகாசஸ் வழக்குகள் – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

திறமையான மூவர்: உத்தரப்பிரதேச பா.ஜ.க.,வில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் ரகசிய ட்வீட், சங்கதன் சர்கார் சே படா ஹை (அரசாங்கத்தை விட அமைப்பு பெரியது), இது நிறைய ஊகங்களைத் தூண்டியது, ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆட்சியின் சாதனையால் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமானவராக இருக்கிறார் என பா.ஜ.க தலைவர்கள் வாதிடுகின்றனர். யோகி, ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்) மற்றும் சிவராஜ் சிங் சௌஹான் (மத்திய பிரதேசம்) ஆகிய மூன்று பா.ஜ.க முதல்வர்கள் தங்கள் செயல்பாட்டு பாணிக்காக பிரதமரின் பாராட்டைப் பெற்றுள்ளனர் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வர்கள் பிரதமரைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம், அவர்கள் ஒரு நோட்பேடையும் பேனாவையும் எடுத்துச் செல்வார்கள், மேலும் 15 நாட்களில் இணக்க அறிக்கைக்கான வழிமுறைகளை உயர் தலைமைகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கிறார்கள் என்று உள்விவகாரங்கள் கூறுகின்றன. இத்தகைய செயல்திறனுக்காக இவர்களுக்கு மோடியிடம் சாஃப்ட் கார்னர் உள்ளது என்கிறார்கள்.

விளையாட்டில் அரசியல்

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை (AIFF) FIFA இடைநீக்கம் செய்ததும் அதன் பிறகு நீதித்துறை தலையீடும் இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க.,வில், கட்சியின் மூத்த தலைவர்கள் பல விளையாட்டு அமைப்புகளின் தலைவராக இருப்பதால், இது பரபரப்பான விஷயமாக மாறியது. கட்சியின் பாரளுமன்ற உறுப்பினரான கே.லக்ஷ்மன், தெலுங்கானா கோர்ப்பால் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக உள்ளார். பா.ஜ.க எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் நாட்டின் மல்யுத்த அமைப்பின் தலைவராகவும், ராஜ்யசபா எம்.பி அனில் ஜெயின் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா உள்ளார், அதே சமயம் கட்சியின் தலைவர் கேப்டன் அபிமன்யு வில்வித்தை சங்கத்தின் ஹரியானா பிரிவுக்கு தலைமை தாங்குகிறார். கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யான அனில் அகர்வால் இந்திய வாலிபால் சங்கத்தின் தலைவராகவும், சுதன்ஷு மிட்டல் இந்திய கோ கோ கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment