Advertisment

சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை - அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

மனுவை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹர், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 22, 23) திஹார் சிறைக்குச் சென்று சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi court allows ED to interrogate Chidambaram in INX Media case - சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை - அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

Delhi court allows ED to interrogate Chidambaram in INX Media case - சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை - அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் நாளையும், நாளை மறுதினமும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது.

மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். சிதம்பரத்துக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டன. இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு சார்பில் அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹர், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 22, 23) திஹார் சிறைக்குச் சென்று சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இரு தினங்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் பிற்பகல 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment