உத்தரபிரதேசத்தில் பக்கவாதத்தால் இரு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த 64 வயது பெண்மணி, ஒரு பள்ளியின் முதல்வராக படுத்த படுக்கையிலிருந்தே தனது பணிகளை 10 ஆண்டுகளாக தொடர்ந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வர் உமா சர்மா. கடந்த 10 ஆண்டுகளாக தனது செல்ஃபோன் மூலம் பள்ளி நிர்வாகத்தை இவர் கவனித்து வருகிறார். இந்த நிலைமையிலும், ஒருநாளும் தன் பள்ளி பணிகளை அவர் தட்டிக் கழித்ததில்லை. தன் வகுப்பு பணிகளையும் அவர் அன்றாடம் செல்ஃபோன் மூலமே கவனிக்கிறார்.
27 ஆண்டுகள் முன்பு அவரது கணவர் இறந்துவிட்டார். அதன்பின் நிகழ்ந்த விபத்து ஒன்றில் தன் மகன் மற்றும் மகளையும் இழந்துவிட்டார்.