Advertisment

தென்னகத்து பாபர் மசூதி: இந்து-இஸ்லாம் கூட்டு குழுவை உருவாக்கும் கர்நாடகா

இ்ந்துத்துவ வலதுசாரி அமைப்பினர் இதனை தென்னகத்து பாபர் மசூதி என்று அழைக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Disputed Karnataka shrine State govt works out a joint Hindu Muslim panel

சிக்மகளூரு பாபாபுடன் கிரி மலை

கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் பாபாபுடன் கிரி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இந்துக்கள் புனிதமாக வணங்கும் ஸ்ரீ குரு தத்தாத்ரேய பாபாபுடன் சுவாமிகளின் பீடமும், தர்காவும் ஓரே இடத்தில் அமைந்துள்ளன.

இந்த பகுதியை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனிதமாக கருதிவருகின்றனர். இ்ந்துத்துவ வலதுசாரி அமைப்பினர் இதனை தென்னகத்து பாபர் மசூதி என்று அழைக்கின்றனர்.

Advertisment

அதாவது இந்த இடத்தில் தத்தாத்ரேய தேவுரு பெயரில் ஒரு கோயிலும், பாபாபுடன் என்ற பெயரில் ஒரு தர்காவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சிக்மகளூரில் உள்ள தத்த பீடத்தில் நடைபெறும் மதச் சடங்குகளை மேற்பார்வையிட, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அடங்கிய குழுவை அமைக்குமாறு கர்நாடக அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மத சடங்குகள் செய்ய இஸ்லாமியர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இது தொடர்பாக நிர்வாகம் சார்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 19 அன்று, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இருவரையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக ஆண்டுதோறும் தத்தா ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, ​​கோயிலைச் சுற்றியுள்ள சர்ச்சை தீவிரமடையும்.

​​​​குறிப்பாக டிசம்பரில் அரசாங்க உத்தரவின்படி, இந்த கூட்டு நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்ட ஒரு இந்து பூசாரி சன்னதியில் தினசரி சடங்குகளை நடத்துவார், மேலும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய மதகுரு தினமும் மாலை மற்றும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் தர்காவில் சுங்கம் செய்வார்.

இந்த குழு தத்த ஜெயந்தி கொண்டாட்டங்கள் உட்பட சன்னதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும். திங்கள்கிழமை இந்த ஏற்பாடு குறித்து உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்த அரசாங்கம், அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் இது கொண்டது எனத் தெரிவத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், சன்னதியில் சடங்குகளை நடத்துவதற்கு, இந்து பூசாரிகளைத் தவிர்த்து, இஸ்லாமிய மதகுருவிடம் அரசாங்கம் ஒப்படைத்தது. அப்போது, ஸ்ரீ குரு தத்தாத்ரேய பீட தேவஸ்தான உயர் நீதிமன்றத்தை அணுகியது.

இது குறித்து, தனி நீதிபதி அமர்வு, "இந்துக்கள் தங்கள் நம்பிக்கையின்படி பூஜை செய்வதைத் தடுப்பது, இஸ்லாமிய மதகுரு நம்பிக்கைக்கு மாறாக பூஜை செய்ய நிர்ப்பந்திப்பது அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இரு சமூகத்தினரின் உரிமையை மீறும் உத்தரவு" என்று கூறியது.

மேலும், விழாக்களை இஸ்லாமிய மதகுரு நடத்த அனுமதிக்கும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி கர்நாடகா அரசு தவறிழைத்ததாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதே நேரத்தில் சன்னதியின் பகிரப்பட்ட நிலை குறித்த 2010 ஆம் ஆண்டு அறக்கட்டளை ஆணையரின் அறிக்கையை நிராகரித்தது.

உயர்மட்டக் குழு அறிக்கை "சார்பற்ற தன்மையிலிருந்து விடுபடவில்லை" என்றும் கூறியது.

“வழிபாட்டுத் தலமாக மாற்றப்படுவது யாருடைய விஷயமல்ல. மறுபுறம், இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் வழிபாட்டுத் தலமாக இருப்பது இரு சமூகத்தினரின் பொதுவான வழக்கு” என்று உயர்நீதிமன்றம் கூறியது.

அது பாபர் மசூதி-ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, “நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மாநில அரசு இந்து- இஸ்லாமியர் ஒற்றுமை குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Bengaluru High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment