Doctors protest West Bengal : மேற்குவங்கமாநிலம் கோல்கட்டா அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள் சரியாக கவனிக்காததால் உயிரிழந்ததாக கூறி டாக்டர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கினர். இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
போராட்டம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் காரணமாக தான் டாக்டர்கள் போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டார். இதனால், கோபமடைந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.