சனிக்கிழமை மாலை டெல்லி- என்.சி.ஆர் பகுதிகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகருக்கு தென்கிழக்கே 212 கிமீ தொலைவில் உள்ள நேபாளத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். புதன்கிழமை, நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி, காசியாபாத், குருகிராம் மற்றும் லக்னோ உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil