Advertisment

4 இயந்திரம்... 4 மணி நேரம்...! தேர்தல் ஆணையத்தின் 'சவால்' தொடங்கியது!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
4 இயந்திரம்... 4 மணி நேரம்...! தேர்தல் ஆணையத்தின் 'சவால்' தொடங்கியது!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியதையடுத்து, அதனை இன்று (ஜுன் 3) நிரூபித்து காட்டுமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இந்த சவாலில் பங்கேற்பதாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தன.

இந்நிலையில், இந்த 'சவால்' நிகழ்வு தற்போது தொடங்கியுள்ளது. இந்த இரு கட்சிகளின் சார்பில் தலா மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக உ.பி, உத்தர்கண்ட் மற்றும் பஞ்சாபில் நடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட அதே மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நான்கு மணி நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள கோளாறை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Election Commission Ncp Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment