வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, சீன மக்கள் விடுதலை இராணுவ பிரிவு மற்றும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று நகு லா செக்டர் அருகே ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் எதிர்கொண்டனர். நகு லா என்பது வடக்கு சிக்கிமில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ளது.
பொதுமக்கள் பங்களிப்பே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு: எய்ம்ஸ் இயக்குனர்
இருபுறமும் வீரர்கள் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள். எவ்வாறாயினும், இரு தரப்பினரும் உள்ளூர் அளவிலான பேச்சுவார்த்தை மூலமும், இரு படைகளுக்கும் இடையிலான உரையாடலுக்குப் பிறகு பிரிந்து சென்றனர்.
எல்லை பிரச்னை தீர்க்கப்படாததால், தற்காலிக மற்றும் குறுகிய கால மோதல்கள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்னைகளை, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகளின்படி வீரர்கள் தீர்த்து கொள்வார்கள். இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு, இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
’எனது உடல்நிலை பற்றி வதந்தி; நான் நலமாக இருக்கிறேன்’ - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
சிக்கிமில் எல்லையைத் தாண்டி இருந்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. 73 நாட்கள் நீடித்த இந்த நிலைப்பாடு, இரு நாடுகளுக்கும் அவர்களின் படைகளுக்கும் இடையில் பதட்டத்தை அதிகரித்தது. டோக்லாமுக்கு தெற்கே ஒரு சாலையை சீனா கட்டிய பின்னர் இது தொடங்கியது.
2017 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் படைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் லடாக்கில் கல் வீச்சில் ஈடுபட்டது குறிப்பிடத்தகது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.