Advertisment

வருமான வரி இ-ஃபைலிங் தளத்தில் கோளாறு; இன்ஃபோசிஸ் சிஈஓ சலில் பரேக்கிற்கு மத்திய அரசு சம்மன்

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட புதிய வரி போர்டல் ஜூன் 7ம் தேதி தொடங்கப்பட்டது. அது சில மணிநேரங்களுக்குள், பல சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியதால் வருமானவரி துறை தாக்கல் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

author-image
WebDesk
New Update
Tax portal still not working, FM summons Infosys CEO, FM summons Infosys CEO Salil Parekh, வருமானவரி இ ஃபைலிங் தளத்தில் கோளாறு, இன்ஃபொசிஸ் சிஈஓ சலில் பரேக்கிற்கு சம்மன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், glitches on new Income Tax e-filing portal, FM Nirmala Sitharaman, Income Tax department, India, Infosys

கடந்த இரண்டு நாட்களாக புதிய வருமான வரித்துறை போர்டல் தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருவதால், நிதி அமைச்சகம் திங்கள்கிழமை இன்போசிஸ் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. இந்த போர்டல் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், தொடர்ந்து கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து பரேக் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நிதியமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட புதிய வரி போர்டல் ஜூன் 7ம் தேதி தொடங்கப்பட்டது. சில மணிநேரங்களுக்குள், ஆதார் சரிபார்ப்புக்காக OTPஐ உருவாக்க இயலாமை, பாஸ் வோர்ட் உருவாக்க குறைபாடுகள், பழைய வருவாய்க்கு பழைய தரவை இணைக்கத் தவறுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. மேலும், வருமானவரி தாக்கல் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

புதிய இ-ஃபைலிங் போர்டல் தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆன பிறகும், போர்ட்டலில் உள்ள குறைபாடுகள் ஏன் தீர்க்கப்படவில்லை என்று நிதியமைச்சருக்கு விளக்க அளிக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் எம்.டி மற்றும் சிஈஓ சலில் பரேக்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. உண்மையில், 21/08/2021 முதல் இந்த போர்டல் கிடைக்கவில்லை” என்று வருமான வரித்துறை ட்வீட் செய்துள்ளது.

இந்த ட்வீட்டை வெளியிட்ட 7 மணி நேரத்திற்குப் பிறகு, இன்போசிஸ் போர்டல் உயிர்ப்புட இருக்கிறது என்று கூறியது. இன்போசிஸ் இந்தியா பிசினஸ் பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் இன்போசிஸ் இந்தியா பிசினஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவிட்ட ட்வீட்டில் கூறியது: “இந்திய வருமானவரித்துறை போர்ட்டலின் அவசர பராமரிப்பு முடிவடைந்தது. போர்டல் உயிர்ப்புடன் உள்ளது. வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்தது.

முன்னதாக, இன்ஃபோசிஸ், “இந்திய வருமானவரித் துறை போர்டல் தொடர்ந்து அவசர பராமரிப்பில் உள்ளது. வரி செலுத்துவோருக்கு போர்டல் மீண்டும் கிடைத்தவுடன் நாங்கள் ஒரு புதுப்பிப்பை வெளியிடுவோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என்று ட்வீட் செய்திருந்தது.

சனிக்கிழமையன்று, வருமான வரித்துறை போர்ட்டல் திட்டமிட்ட பராமரிப்பு காரணமாக தற்போது அணுக முடியாது என்று ட்வீட் செய்திருந்தது.

இந்த போர்டல் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட 15 மணி நேரத்திற்குள், நிதி அமைச்சர் சீதாராமன் ட்வீட் செய்தார்: “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இ-ஃபைலிங் போர்டல் 2.0 நேற்று இரவு 20: 45 மணிநேரத்தில் தொடங்கப்பட்டது. என் TL குறைகள் மற்றும் கோளாறுகளை நான் பார்க்கிறேன். இன்ஃபோசிஸ் மற்றும் நந்தன் நிலகனி வழங்கப்பட்ட சேவையின் தரத்தில் நம்முடைய வரி செலுத்துவோரை வீழ்த்தாது என்று நம்புகிறேன். வரி செலுத்துவோருக்கு இணங்குவதில் எளிதாக இருப்பது நம்முடைய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இந்த விஷயத்தை விரைவாகப் பார்க்க அவர் இன்போசிஸுக்கு உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, ஐடி துறை பணம் அனுப்பும் படிவங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது. மேலும், ஓய்வூதிய நிதி மற்றும் செல்வ நிதி அறிவிப்பு தொடர்பான படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூன் 22ம் தேதி இன்போசிஸின் முக்கிய அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தி அழைத்து போர்ட்டலில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்தார். இன்போசிஸ் அனைத்து பிரச்சினைகளையும் தாமதமின்றி தீர்க்கவும், அவர்களின் சேவைகளை மேம்படுத்தவும், குறைகளை முன்னுரிமையுடன் நிவர்த்தி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சந்திப்பின் போது, ​​இன்ஃபோசிஸ் சிஈஓ பரேக், இன்போசிஸ் சிஓஓ பிரவின் ராவ் மற்றும் பிற நிறுவன அதிகாரிகள் பிரச்சினைகளைக் கவனித்தனர். இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய வேலை செய்து வருகிறது என்றார். மின் நடைமுறைகள், படிவம் 15 சிஏ/15 சிபி, டிடிஎஸ் அறிக்கைகள், டிஎஸ்சி மற்றும் கடந்த ஐடிஆர்களைப் பார்ப்பது தொடர்பாக குறைந்தது ஐந்து சிக்கல்கள் ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறியது. இருப்பினும், போர்டல் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் புதிய இ-ஃபைலிங் போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் அடுத்த சில நாட்களில் பெரும்பாலும் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார். “நான் இன்போசிஸை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன், (இன்போசிஸ் தலைவர்) நந்தன் நிலகனி அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று எனக்கு உறுதியளித்தார்” என்று அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டில், இன்போசிஸ், அடுத்த தலைமுறை வருமான வரி தாக்கல் முறையை 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக வரி செலுத்துவதற்கான நேரத்தைக் குறைக்கவும், பணத்தைத் திருப்பித் தரவும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஜூன் 2021 வரை, அரசாங்கம் இன்போசிஸுக்கு ரூ.164.5 கோடியை செலுத்தியுள்ளது.

வருமான வரித்துறை போர்ட்டலை உருவாக்கி நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முன்பு, பெங்களூரைச் சேர்ந்த இன்போசிஸ் அரசு மற்றும் அதன் ஏஜென்சிகளால் பல முதன்மை தகவல் தொழில்நுட்பத் திட்டங்களுக்கு நியமிக்கப்பட்டது. கார்ப்பரேட் விவகார அமைச்சின் MCA21 v2 போர்ட்டலை செயல்படுத்த $ 50 மில்லியன் டாலர் ஒப்பந்தம் உட்பட சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கிற்கான ஐடி கட்டமைப்பை உருவாக்க ரூ.1,380 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த மூன்று முக்கிய திட்டங்களிலும், இன்போசிஸ் தயாரிப்புகள் செயல்திறன் சிக்கல்களைக் கண்டன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Income Tax Return Filing Infosys Income Tax Returns
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment