Advertisment

இலங்கையில் ராமாயண இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த இந்தியா ஆதரவு - வெளியுறவு செயலர்

நான்கு நாள் பயணமாக சனிக்கிழமை இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய தளங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஆதரவளிக்கும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
இலங்கையில் ராமாயண இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த இந்தியா ஆதரவு - வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவும் இலங்கையும் பொருளாதார குட்டுறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை, பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல அண்டை நாடுகளின் உறவுகளால் வரையறுக்கப்பட்ட பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும் ஒன்றாக வேலை செய்வது முக்கியம் என்று கூறினார்.

Advertisment

இலங்கை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸில் இந்திய மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்களை துவக்கி வைக்கும்போது ஷ்ரிங்லா குறிப்பிடுகையில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பேரழிவு தரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தங்கள் பொருளாதாரத்தில் பெரும் இடையூறுகளை கண்டதாகக் கூறினார்.

“நாம் நம்முடைய நாடுகளுக்கு வேகமாக சமூக-பொருளாதார மீட்சியை தேடும்போது நமது பொருளாதார கூட்டுறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை, பரஸ்பர புரிதல் மற்றும் நன்மைகளல் வரையறுக்கப்பட்ட ஒரு பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நமது காலத்தி பரிசோதனைக்குட்பட்ட இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும் பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல அண்டை நாடுகளின் உறவுகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றாக வேலை செய்வது முக்கியம்.” வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஷ்ரிங்லா கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், “நம்முடைய சமூக பொருளாதார ஈடுபாட்டில் கோவிட் -19 கட்டுப்பாடுகளின் பாதகமான தாக்கத்தை தணிப்பதில் நாங்கள் பங்களிக்காமல் விட மாட்டோம் என்பதையும் இந்த கோவிட் மீட்சிக்கு பிந்தைய முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நிற்போம் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நான் உறுதி கூறுகிறே” என்று அவர் கூறினார்.

நான்கு நாள் பயணமாக சனிக்கிழமை இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு செயலாளர், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய தளங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசு ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இலங்கையில் இந்திய வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன் என்று ஷ்ரிங்லா கூறினார்.

தொடர்ந்து பேசிய ஷ்ரிங்லா, “எனது தற்போதைய பதவியில் இது எனது முதல் இலங்கை வௌகை. ஆனால், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகை தந்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஆண்டுகளில், நம்முடைய உறவுகளில் விரிவான மாற்றத்திற்கு நான் ஒரு சாட்சியாக இருந்தேன்.

நான் நேற்று கண்டிக்கு வந்து தலதா மாலிகாவ கோவிலின் தரிசனம் செய்து மகிழ்ச்சியடைந்தேன். நான் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் சென்று பார்த்தேன். அங்கே யாழ் கலாச்சார மையத்தை பார்த்தேன். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட ஒரு முக்கியமான திட்டம்” என்று கூறினார்.

இந்த இடங்கள் இரு நாடுகளும் பகிர்ந்துகொண்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வலுவான இருதரப்பு வளர்ச்சி கூட்டுறவு ஆகியவற்றை தெளிவாக விவரிக்கின்றன என்றார்.

உயர்மட்ட தலைவர்களின் வருகைகள், குறிப்பாக நவம்பர் 2019ல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவும் பிப்ரவரி 2020ல் பிரதமர் மஹிந்த ராஜபக்சாவும் ஆகியோரின் அரசு முறை வருகைகள் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஷிரிங்லா கூறினார்.

“செப்டம்பர் 2020ல் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் மஹிந்த ராஜபக்சாவும் இடையேயான வெர்சுவல் இருதரப்பு உச்சிமாநாடு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருந்தது. ஏனென்றால், இது பாதுகாப்பு மற்றும் காவல், சுகாதாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வணிகம் மற்றும் இரு நாட்டு மக்களுடனான உறவுகள் போன்ற துறைகளில் நமது ஒத்துழைப்பின் எதிர்கால பரிணாம வளர்ச்சிக்கான முன்மாதிரியாக அமைந்தது.” என்று ஷ்ரிங்லா கூறினார்.

கடந்த ஓராண்டில், பரந்த இந்து மகா சமுத்திரப் பிராந்திய HADR (மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்) சூழ்நிலைகளில் இந்தியா ஒரு பெரிய பாதுகாப்பு வழங்குநராகவும் முதலில் பதிலளிக்கும் நாடு என்ற நற்சான்றுகளை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

அண்மையில் தனது கடல் எல்லையில் கடல் மாசுபாடு ஏற்பட்டால் இலங்கையின் கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஷிரிங்லா கூறினார். கோவிட் -19 நிலைமையை சமாளிக்க ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு மருத்துவ தர ஆக்ஸிஜனை விரைவாக வழங்குவதற்காக இந்திய கடற்படை தனது சொத்துக்களை பயன்படுத்தியது என்று கூறினார்.

“கோவிட் தொற்றுநோய் காலத்தில், இலங்கையின் குறிப்பிட்ட அவசர மருத்துவத் தேவைகளுக்காகப் பயணிக்க இந்தியா அனுமதி அளித்தது.

இலங்கையில் நிலைமை தளர்த்தப்பட்டவுடன், யாழ்ப்பாணம் முதல் சென்னை விமானம், காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை, தனுஷ்கோடி மற்றும் தலைமனார் இடையே படகு சேவைகள் மற்றும் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடன் புத்த வழித்தடம் போன்ற இணைப்பு முயற்சிகளில் நாம் பணியாற்றுவதற்கு இது வாய்ப்பாக இருக்கலாம்.” என்று ஷ்ரிங்லா கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ‘வெச்சுவல்’ உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையிலிருந்து குஷிநகர் விமான நிலையத்திற்கு இந்தியா முதல் யாத்திரை விமானத்தை பெற எதிர்பார்த்துள்ளதாக ஷிரிங்லா கூறியதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியாவுடன் சுற்றுலாவை மீண்டும் தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில், அது எப்போதும் இலங்கை தீவின் தலைசிறந்த சுற்றுலா ஆதாரமாக விளங்குகிறது.

2009 ஆம் ஆண்டில், இந்தியா தனது வீட்டுத்திட்டத்தை இலங்கையில் தொடங்கியதாக ஷிரிங்லா தனது கருத்துகளில் கூறினார். காலப்போக்கில், இந்த திட்டம் இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு கூட்டுறவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

“இன்று, மலையகம் முழுவதும் பரவி இருக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 1,235 வீடுகளை அர்ப்பணிக்கிறோம்” என்று ஷ்ரிங்லா கூறினார்.

2009ம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொலையுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Sri Lanka Rajapakse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment