முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.
முன்னாள் நிதி அமைச்சர், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருடய மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜஸ்வந்த் சிங் முதலில் ஒரு ராணுவ வீரராகவும், பின்னர் அரசியலிலும் சோர்வடையாமல் நம் தேசத்துக்காக பணியாற்றினார். அடல் பிகாரி வாஜ்பாய் அவர் முக்கியமான இலாகாக்களை நிர்வகித்தார். நிதித்துறை பாதுகாப்புத்துறை மற்றும் வெளி விவகாரத் துறைகளில் ஒரு வலுவான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவால் வருத்தமடைந்துள்ளேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
Jaswant Singh Ji served our nation diligently, first as a soldier and later during his long association with politics. During Atal Ji’s Government, he handled crucial portfolios and left a strong mark in the worlds of finance, defence and external affairs. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர், “ அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் அவரது தனித்துவமான பார்வைக்காக நினைவுகூரப்படுவார்” என்று பிரதமர் மோடி கூறிப்பிட்டுள்ளார். “பாஜகவை வலுப்படுத்தவும் அவர் பங்களித்தார். எங்களுக்கு இடையேயான தொடர்புகளை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி” என்று பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
அதே போல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானதால் ஆழ்ந்த வேதனையடந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல துறைகளில் தேசத்திற்காக சேவை செய்தார். அவர் ஒரு திறமையான அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற வாதி என்று தன்னை நிறுவிக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.