Advertisment

பேச்சுரிமையை தனிநபருக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் – உச்ச நீதிமன்றம் அனுமதி

தனியார் குடிமக்களுக்கு எதிரான பேச்சு சுதந்திரத்தை நீட்டிக்கும் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தில் பல சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது

author-image
WebDesk
New Update
The Supreme Court adjourned the AIADMK General Assembly case to January 10

இரட்டை தலைமை காலாவதியாகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

Apurva Vishwanath

Advertisment

ஒரு குடிமகன், பேச்சு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், மற்ற குடிமக்களுக்கு எதிராகவும் அமலாக்க முற்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இந்த உரிமைகளைப் பெறுவதற்கான தளத்தை திறம்பட நீட்டித்துள்ளது.

"சட்டப்பிரிவு 19/21 இன் கீழ் ஒரு அடிப்படை உரிமையானது அரசு அல்லது அதன் அமைப்புகளைத் தவிர வேறு நபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்" என்று அரசியலமைப்பு பெஞ்ச் செவ்வாயன்று வழங்கிய 4-1 பெரும்பான்மை தீர்ப்பு கூறியது.

இதையும் படியுங்கள்: அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்துக்கு அரசு பொறுப்பேற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

சட்டப்பிரிவு 19(1)(a) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை ஏற்கனவே விதி 19(2) இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த கூடுதல் காரணங்களாலும் தடுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கும் போது நீதிமன்றம் இந்தக் கருத்தை எடுத்தது.

நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று, "இந்திய அரசியலமைப்பின் 19 அல்லது 21 வது பிரிவின் கீழ் ஒரு அடிப்படை உரிமையானது 'அரசு' அல்லது அதன் அமைப்புகளைத் தவிர பிறருக்கு எதிராகக் கோர முடியுமா?"

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யும் பிரிவு 19 என்பது அரசுக்கு எதிரான உரிமையாகும். தீண்டாமை, ஆட்கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை தடை செய்தல் போன்ற சில அடிப்படை உரிமைகள் வெளிப்படையாக அரசுக்கு மற்றும் பிற தனிநபர்களுக்கு எதிரானவை.

இந்த நிலையில், தனிப்பட்ட குடிமக்களுக்கு எதிரான பேச்சு சுதந்திரத்தை நீட்டிக்கும் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தில் பல சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது.

இந்த விளக்கம் தனியார் நிறுவனங்களும் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிவதை உறுதிசெய்யும் கடமையை அரசுக்குக் கொண்டுவரலாம். இந்தக் கேள்விகள் ஒரு தனியார் மருத்துவருக்கு எதிராக தனியுரிமை உரிமைகளை அமல்படுத்துவது முதல் ஒரு தனியார் சமூக ஊடக நிறுவனத்திற்கு எதிராக சுதந்திரமான பேச்சுக்கான உரிமையை நாடுவது வரை அனுமானமாக இருக்கலாம்.

“இந்த உரிமைகளை அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற இந்த நீதிமன்றத்தின் அசல் சிந்தனை, காலப்போக்கில் மாறிவிட்டது. 'அரசு' என்பதிலிருந்து 'அதிகாரிகள்' என்று 'அரசின் அமைப்புகள்' 'அரசாங்கத்தின் நிறுவனம்' 'அரசாங்கத் தன்மையுடன் செறிவூட்டல்' 'அரசால் வழங்கப்பட்ட ஏகபோக அந்தஸ்தை அனுபவிப்பது' என செய்யப்பட்ட கடமைகள் / செயல்பாடுகளின் தன்மைக்கு "ஆழமான மற்றும் பரவலான கட்டுப்பாட்டிற்கு" மாற்றப்பட்டது,” என்று நீதிபதி வி ராமசுப்ரமணியனின் பெரும்பான்மைக் கருத்து கூறியது.

புட்டசாமியின் 2017 தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நம்பியுள்ளது, அங்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தனியுரிமையை ஒரு அடிப்படை உரிமையாக ஒருமனதாக உறுதி செய்தது. அரசாங்கத்தின் முக்கிய வாதங்களில் ஒன்று, தனியுரிமை என்பது மற்ற குடிமக்களுக்கு எதிராக செயல்படுத்தக்கூடிய ஒரு உரிமையாகும், எனவே, அரசுக்கு எதிரான அடிப்படை உரிமையின் நிலைக்கு உயர்த்த முடியாது.

ஐரோப்பிய நீதிமன்றங்களுடன் அமெரிக்க அணுகுமுறைக்கு மாறாக, பல வெளிநாட்டு அதிகார வரம்புகளையும் நீதிமன்றம் குறிப்பிடுகிறது. நியூ யார்க் டைம்ஸ் எதிர் சல்லிவன் என்ற முக்கிய வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிடுகையில், தி நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அரசால் பயன்படுத்தப்பட்ட அவதூறுச் சட்டமானது, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு முரணானது, என அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருதியது, அமெரிக்க சட்டம் "முற்றிலும் செங்குத்து அணுகுமுறையில்" இருந்து "கிடைமட்ட அணுகுமுறைக்கு" மாற்றப்பட்டது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

"உலகில் எந்த அதிகார வரம்பும் குறைந்தபட்சம் தற்போது வரை, முற்றிலும் செங்குத்து அணுகுமுறை அல்லது முற்றிலும் கிடைமட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. செங்குத்து அணுகுமுறை தனிப்பட்ட சுயாட்சி, தேர்வு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கு வெயிட்டேஜ் வழங்குகிறது, அதே சமயம் கிடைமட்ட அணுகுமுறை உள்வாங்க முற்படுகிறது.

அனைத்து தனிநபர்களிலும் அரசியலமைப்பு மதிப்புகள் உள்ளன. இருமுனை எதிர்நிலைகளாகத் தோன்றும் இந்த அணுகுமுறைகள், 'தனிநபர் எதிர் சமூகம்' என்ற பழமையான கேள்வியை எழுப்புகின்றன," என்று நீதிமன்றம் கூறியது.

உரிமைகளின் செங்குத்து பயன்பாடு என்பது அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்தப்பட முடியும் என்று பொருள்படும், அதே சமயம் கிடைமட்ட அணுகுமுறை மற்ற குடிமக்களுக்கு எதிராக செயல்படுத்தக்கூடியது என்று பொருள்படும்.

எடுத்துக்காட்டாக, வாழ்வதற்கான உரிமையின் கிடைமட்டப் பயன்பாடு, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையை மீறும் வகையில் மாசு ஏற்படுத்தியதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஒரு குடிமகன் வழக்குத் தொடர உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment