இந்திய ராணுவம், கடற்படையில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவிக்கும் வண்ணம் 132 பேருக்கு வீர, தீர சாகச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதை, நாட்டின் 73வது சுதந்திர தினமான நாளை வழங்க உள்ளார்.
கீர்த்தி சக்ரா விருதுகள் இருவருக்கும், வீர் சக்ரா ஒருவருக்கும், சவுர்ய சக்ரா விருதுகள் 14 பேருக்கும், பார் டு சேனா விருதுகள் 8 பேருக்கும், சேனா விருதுகள் 90 பேருக்கும், 5 பேருக்கு நவ் சேனா விருதுகளை வழங்க உள்ளார்.
கீர்த்தி சக்ரா விருதுகள்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் யாதவ்
சிஆர்பிஎப் டெபுடி கமாண்டண்ட் ஹர்ஷ்பால் சிங்
வீர் சக்ரா விருது
விமானப்படையின் விங் கமாண்டர் வர்தமான் அபிநந்தன்
லெப்டினன்ட் கர்னல் அஜய் சிங் குஷ்வா, வீரமரணம் அடைந்த மேஜர் விபுதி சங்கர் தெளண்டியால் உள்ளிட்ட 14 பேருக்கு சவுர்ய சக்ரா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் நவீன் ரெட்டி உள்ளிட்ட 8 பேருக்கு பார் டு சேனா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
லெப்டினன்ட் கர்னல் ராஜேஷ் செளத்ரி, லெப்டினன்ட் கர்னல் பகவான் சிங் பிஸ்த் உள்ளிட்ட 28 பேருக்கு சேனா விருதுகளும் வழங்கப்பட உள்ளன.