Gandhi Jayanti News 2 October 2019: இது மகாத்மாவின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தேசத் தந்தையின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இன்று முழுவதும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர் .
Live Blog
Mahtama Gandhi's 150th birth anniversary: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகைத் தரவிருக்கிறார். மேலும், லைவ் செய்திகளுக்கு பின்தொடரவும்.
ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான தேசிய விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார்.
பிரதமர் மோடி: துப்புரவு, சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, இந்த விஷயங்கள் அனைத்தும் காந்திக்கு மிகவும் பிடித்தவை. அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் இலக்கை நாம் அடைய வேண்டும் என்று கூறினார்.
PM Modi: Sanitation, conservation of environment and animals, all these things were dear to Gandhi ji. Plastic is a major threat to all of them. So, we have to achieve the goal to eradicate 'single use plastic' from the country by the year 2022. #SwachhBharat #GandhiAt150 pic.twitter.com/4Bru8NeMgr
— ANI (@ANI) October 2, 2019
பிரதமர் நரேந்திர மோடி: இன்று உலகம் முழுவதும் நம்மை பாராட்டுகிறது. விருது அளிக்கிறது. 60 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கழிப்பறைகளை வழங்குதல். 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டியதை உலகம் முழுவதும் கண்டு வியப்படைகிறது என்று கூறினார்.
சபர்மதி ஆசிரமத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற அவரது கனவை நிறைவேறியதை காண்கிறோம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா திறந்தவெளி கழிப்பிடத்தை நிறுத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிதமர் மோடி, அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், ரூ.150வது நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
Ahmedabad: Prime Minister Narendra Modi releases commemorative Rs 150 coins, on the occasion of Mahatma Gandhi's 150th birth anniversary. #GandhiAt150 pic.twitter.com/JAvNpeUcjX
— ANI (@ANI) October 2, 2019
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் தூய்மை இந்தியா தினம் (ஸ்வச் பாரத் திவாஸ்) நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் கலந்து கொண்டார்.
Gujarat: Prime Minister Narendra Modi arrives for the 'Swachh Bharat Diwas' programme at Sabarmati Riverfront in Ahmedabad. Chief Minister Vijay Rupani also present. pic.twitter.com/DH3xZ7YYm1
— ANI (@ANI) October 2, 2019
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் "உலகம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துக் கொள்ளுங்கள், மகாத்மா காந்தியின் போதனைகள் அந்த சவால்களுக்கு தீர்வுகளை வழங்குகின்றன." என்று கூறினார்.
Mahatma Gandhi pioneered successive non-violent movements that changed history.
150 years since his birth, Gandhi’s philosophy is at the core of our work at the @UN. May his courage & conviction continue to inspire us on Wednesday’s International Day of Non-Violence & every day.
— António Guterres (@antonioguterres) October 2, 2019
மகாத்மா காந்தி வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தால் வரலாற்றை மாற்றியதில் முன்னோடியாக இருந்தார். காந்தியின் தத்துவத்தை மையாமாக வைத்துதான் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு உள்ளது என்று ஐ. நா பொதுச் செயலாளர் ட்வீட் விடுத்துள்ளார் .
Gandhiji, who believed in the Swa-based reorganisation of Bharat,firmly stood for social equality and harmony and translated his vision into action,had set an example for all through his life.We must perceive,understand and manifest it in our life.-Mohanji Bhagwat#GandhiJayanti pic.twitter.com/eE19jAShsk
— RSS (@RSSorg) October 2, 2019
சுயம்சேவாக் போன்ற அமைப்புகள் போல் பாரதத்தை மறுசீரமைக்க நினைத்தவர் காந்தி. சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்காக உறுதியாக நின்றதோடு மட்டுமல்லாமல், தனது பார்வையை செயல்பாட்டாவும் மொழிபெயர்த்தவர். அவரின் வார்த்தைகளை நம் வாழ்க்கையில் உணர வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், வெளிப்படுத்த வேண்டும் என்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்தி காங்கிரஸின் 'பத்யாத்ரா'வுக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டெல்லி காங்கிரஸ் அலுவலகம் ராஜீவ் பவனில் தொடங்கி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்காட் நோக்கி இந்த பாதயாத்திரை நடக்க விருக்கிறது. காந்தியின் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
காந்தியடிகளின் அஸ்தி 12.02.1948 அன்று குமரிக்கடலில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 1956ம் ஆண்டு குமரிக்கடற்கரையில் அவர் நினைவாக ஒரு மண்டபம் எழுப்பப்பட்டது. அந்த மண்டபத்தில் ஒரு விஷேசம் என்னவென்றால் அவர் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஒரு துவாரம் வழியாக காந்தியடிகளின் அஸ்தி வைத்த இடத்தில் சூரிய ஒளி விழும். இந்நிகழ்ச்சியை வருடந்தோறும் அக்டோபர் 2 அன்று தமிழ் நாடு அரசு சிறப்பாக நடத்துகின்றது.
மேலும், படிக்க காந்திஜியும், கன்னியாகுமரி ஆலயப் பிரவேசமும்!
I join fellow Indians in paying tribute to the Father of the Nation.
He taught us non-violence, compassion, dissent and to be courageous when faced with adversity.
We must remember him and his idea of India today, more than ever.
May truth always triumph.#GandhiAt150 pic.twitter.com/lBjfXanBEX
— M.K.Stalin (@mkstalin) October 2, 2019
சக இந்தியர்களோடு இணைந்து தேசத்தின் தந்தைக்கான மரியாதையை நானும் செலுத்துகிறேன். அகிம்சை, இரக்கம், கருத்து வேறுபாடு மற்றும் துன்பங்களை எதிர்கொள்ளும்போது தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் . முன்னெப்போதையும் விட, இந்தியாவைப் பற்றிய காந்தியின் யோசனைகளை இன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மை எப்போதும் வெற்றிபெறட்டும் என்று ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
| காந்தி ஜெயந்தியை இந்தியா கொண்டாடுகிறது. பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மகாத்மாவுக்கு அஞ்சலி வருகின்றனர்.
புதுடெல்லியின் ராஜ்காட்டில் பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
லூதியானாவில் அமைதி ஊர்வலம்
அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமம்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி
ஆகா கான் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
India is a country of villages, and the country cannot develop without the development of its villages
Listen to #MahatmaGandhi speaking after Prarthana Sabha on 29th November 1947, on the benefits of development reaching the poor#GandhiAt150 pic.twitter.com/mO8D0YNiit
— PIB in Maharashtra (@PIBMumbai) October 2, 2019
இந்தியா கிராமங்களால் கட்டியமைக்கப்பட்ட நாடு. கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல் நாடு அபிவிருத்தி செய்ய முடியாது என்றார் காந்தி. வளர்ச்சியின் நன்மைகள் ஏழைகளுக்கு சென்றைடைய வேண்டும் என்று 1947 நவம்பர் 29 ஆம் தேதி பிரார்த்தனா சபைக்குப் பிறகு மகாத்மகாந்தி பேசுவதை இங்கே கேளுங்கள்.
இந்திய வரலாற்றில் காந்தியின் வருகை பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் மகாத்மா காந்தியின் வருகைக்குப் பிறகுதான் இந்தியா முழுவதும் வெகுஜன மக்கள் திரள் போராட்டம் என்ற ஒன்று வருகிறது. அதற்கு முன்பு அது ஏதேனும் ஒரு சமூக குழுவின் மக்கள்திரள் போராட்டமாக மட்டுமே இருந்தது. காந்தி ஒவ்வொரு போராட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக மட்டுமில்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் வடிவமாகவும் அதை மாற்றினார்.
மேலும், படிக்க மகாத்மா காந்தி இந்தியாவின் கை விளக்கு
On his 150th Jayanti, my tributes to Mahatma Gandhi Ji, the “Father of the Nation”, who through his words & deeds, showed us that love for all living beings & non violence is the only way to defeat oppression, bigotry & hatred.
#Gandhi150 pic.twitter.com/ODRLL7o1os
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2019
தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு எனது அஞ்சலியை செலுத்திகிறேன். அடக்குமுறை, மதவெறி & வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள அன்று காந்தி காட்டிய அன்பும், அகிம்சையுமே இன்று நமக்குத் துணையாய் உள்ளது.
I have asked my family to tweet on my behalf the following on October 2, 2019:
Today is the 150th birth anniversary of Mahatma Gandhi. My salutations and homage to the Great Soul.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 2, 2019
The evolution and history of homo sapiens until the end of the 19th century was largely a story of enslavement. Might was right and ‘King can do no wrong’.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 2, 2019
The seeds of democracy flowered only in the 20th century bringing the hope of liberty and equality to hundreds of countries and millions of people.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 2, 2019
The 21st century has eroded that hope. Democracy is being hollowed out in country after country - Venezuela, Russia, Myanmar, Turkey, Hungary and now even in the United States.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 2, 2019
Which way will India go? Freedom is a never ending struggle. Eternal vigilance is the price of liberty.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 2, 2019
இன்று மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள். அந்த பெரிய ஆத்மாவுக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் இங்கே உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ப.சிதம்பரத்தின் சார்பாக அவரின் குடும்ப நபர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
காந்தியின் அகிம்சை போதனைகள் குறித்து சுமார் 900 மாணவர்கள் இன்று காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights