சாரிடான் உட்பட 328 மருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தொழில்நுட்ப குழுஅளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரிடன் மாத்திரை:
சாரிடன்
மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு கடந்த 2016-ம் ஆண்டு 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. இந்த மருந்து பொருட்களில் மக்கள் தலைவலி,சளி போன்றவற்றிற்கு அடிக்கடி பயன்படுத்தும் சாரிடன், சரும நோய் கிரீம் பாண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம் பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரியா எதிர்ப்பு டேக்சிங் ஏ.இசட். ஆகிய புகழ்பெற்ற மருந்துகள் அடங்கும்.
இந்நிலையில் இந்த மருந்து நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைத்தப்படி 328 மருந்து பொருட்களின் விற்பனை மற்றும் உற்பதிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.