Advertisment

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ய பின் அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தை முழுவதுமாக திருப்ப பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மட்டும் ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கும்.

Advertisment

காஷ்மீர் உள்பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கான திட்டம் சுமார் இரண்டு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இப்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம், ஜே & கே போலீஸ், ஆயுதப்படைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய இரண்டின் சவால்களை எதிர்கொள்ள பள்ளத்தாக்கில் இருந்து ராணுவம் விலகப்பட்டால் அதனை சிஆர்பிஎஃப் நிரப்பும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். இருப்பினும், இறுதியில், இது ஒரு அரசியல் அழைப்பாக இருக்கும் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

அதிகாரிகள் கூறுகையில், ஜே & கே முழுவதிலும் சுமார் 1.3 லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் எல்லையில் மட்டும்

80,000 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த சுமார் 40,000-45,000 வீரர்கள் காஷ்மீரின் உள்நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான போர்வையைக் கொண்டுள்ளனர்.

ஜே & கே-வில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 60,000 பேர் உள்ளனர். அவர்களில் 45,000 க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜே&கே போலீஸ் 83,000 பேர் உள்ளனர். இது தவிர, மற்ற மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) சில நிறுவனங்கள் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து CAPFகளின் புள்ளிவிவரங்கள் மாறுபடும்.

காஷ்மீரில் இயல்பு நிலை இருப்பதாகக் கூறுவது மட்டுமல்லாமல், அதைக் காணச் செய்வதும் இந்த விவாதத்தின் பின்னணியில் உள்ளது. ஆகஸ்ட் 5, 2019-இல் இருந்து ஜே & கே-வில் பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டுவது அதற்கு முந்தைய அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

"ஆகஸ்ட் 5, 2019 பிறகு, பள்ளத்தாக்கில் வன்முறை படிப்படியாகக் குறைந்துள்ளது. கல் வீச்சு சம்பவங்கள் இல்லை. சட்டம்-ஒழுங்கு நிலைமை பெரும்பாலும் கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து பள்ளத்தாக்கில் ராணுவத்தை விலக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Jammu And Kashmir Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment