Advertisment

நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் - ராம் விலாஸ் பாஸ்வான்

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைக்காரர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்க முடியாது. மேலும் இந்த விதியை மீறினால் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hallmarking jewellery, gold jewellery, ஹால்மார்க் முத்திரை, ராம் விலாஸ் பாஸ்வான், ram vilas paswan, தங்க நகைகள், consumer affairs ministry, wto, bureau of indian standards, hallmarking scheme, hallmarking, BIS, hallmarking jewellery to be must from next year

hallmarking jewellery, gold jewellery, ஹால்மார்க் முத்திரை, ராம் விலாஸ் பாஸ்வான், ram vilas paswan, தங்க நகைகள், consumer affairs ministry, wto, bureau of indian standards, hallmarking scheme, hallmarking, BIS, hallmarking jewellery to be must from next year

2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தங்க ஹால்மார்க் முத்திரை இப்போது வரை நகைக்கடைக்காரர்களுக்கு ஒரு தேர்வாக இருக்கிறது. அதன் மூலம், தற்போது சுமார் 40% தங்க நகைகள் அடையாளப் படுத்தப்படுகின்றன.

Advertisment

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைக்காரர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்க முடியாது. மேலும் இந்த விதியை மீறினால் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும். இதேபோல், 14 அல்லது 18 அல்லது 22 காரட் தங்கத்தால் மட்டுமே செய்யப்பட்ட நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் 2021 ஜனவரி நடுப்பகுதியில் இருந்து சந்தையில் கிடைக்கும்.

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இந்த முடிவை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதன்படி, நகைக்கடைக்காரர்களுக்கு இந்திய தர நிர்ணய பணியகத்தில் (பிஐஎஸ்) பதிவு செய்ய ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் அடையாளப்படுத்தப்படாவிட்டால் அவற்றின் இருப்பை அழிக்கவும் கூறினார். இது தங்க நகைகளின் தூய்மையை நம்ப நுகர்வோருக்கு உதவும். 2021 ஜனவரி 15 முதல் தங்க நகைகளை கட்டாயமாக அடையாளப்படுத்துவதற்கான அறிவிப்பு நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.

2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தங்க ஹால்மார்க் முத்திரை, இப்போது வரை நகைக்கடைக்காரர்களுக்கு விருப்பமானதாக உள்ளது. அதன் மூலம், தற்போது சுமார் 40% தங்க நகைகள் அடையாளப் படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், நகைக்கடைக்காரர்கள் தாங்கள் விற்கும் ஒவ்வொரு தங்கப் நகைக்கும் 234 மாவட்டங்களில் பரவியிருக்கும் 892 மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க் மையங்கள் மூலமாக ஹால்மார்க் சான்றிதழைப் பெறுகிறார்கள். ஹால்மார்க் முத்திரை திட்டத்தின் கீழ் இதுவரை 28,849 நகைக்கடை விற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். சான்றிதழ் பெற்றுள்ளனர். இது விலைமதிப்பற்ற உலோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் தூய்மை சான்றிதழ் ஆகும்.

“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் மையங்களைத் திறந்து, இந்த ஒரு ஆண்டு சாளர முறையில் அனைத்து நகைக்கடைகளையும் பதிவு செய்ய நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார். கட்டாய ஹால்மார்க் முத்திரை குறைந்த காரட்டிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் மற்றும் தங்க ஆபரணங்களை வாங்கும் போது நுகர்வோர் ஏமாற்றப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இப்போது வரை பத்து தரங்களுக்கு பதிலாக, ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் விதி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 14 கிரேடு, 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களாக மட்டுமே இருக்கும் என்று அவர் கூறினார்.

சில்லறை விற்பனையாளர்களின் விற்பனையில் மட்டுமே இந்த விதி பொருந்தும் என்பதால் நுகர்வோர் தங்கள் பழைய நகைகளை பரிமாறிக்கொள்வதில் எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

உலகின் மிகப்பெரிய தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 700-800 டன் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க இறக்குமதி 2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 502.9 டன்னாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 587.3 டன்னாக இருந்தது.

விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை குறித்து, பிஐஎஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நகையின் மதிப்பில் ரூ .1 லட்சம் முதல் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்.

Union Minister Ram Vilas Paswan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment