Advertisment

ஹரியானாவில் சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

ஆடு ஒன்றை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹரியானாவில் சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

ஹரியானா மாநிலத்தில் ஆடு ஒன்றை 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சினையாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவலர்களே அரண்டு போயுள்ளனர்.

அவர் தனது குற்றச்சாட்டில், கடந்த 25ம் தேதி இரவு, தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகி இருப்பதாக தெரிய வந்துளளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆடு இறந்ததற்கான காரணம் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு கூறுகையில், "எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு தூக்கிச் சென்றனர். அவர்களை நான் எவ்வளவோ தடுத்தும், போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறியும், எதற்கும் மசியவில்லை" என்றார். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பீட்டா அமைப்பின் நிர்வாகி மீட் அஷர் , விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. விலங்குகள் மீது இது போன்ற செயலை செய்பவர்கள் பின்னர் மனிதர்கள் மீதும் நடத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment