Advertisment

இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து; வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை

author-image
WebDesk
New Update
இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ஆகியோர் திங்களன்று ஒரு மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது இரு நாடுகளும் தங்களுக்குள் கல்வி பயிலவும், ஆராய்ச்சி செய்யவும் மற்றும் வேலை செய்யவும் எளிதாக்குகிறது.

Advertisment

"இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே மொபைலிட்டி ஒப்பந்தம் கையெழுத்தானது இன்னும் சமகால இருதரப்பு கூட்டாண்மைக்கான அடிப்படையின் வலுவான சமிக்ஞையாகும்" என்று ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. "உலகம் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது ஒன்றாக இருப்பது முக்கியம்" என்று அன்னலெனா பேர்பாக் கூறினார்.

இதையும் படியுங்கள்: தர்மத்தின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக்கூடாது.. உச்ச நீதிமன்றம்

அதன்பிறகு ஒரு கூட்டு ஊடக சந்திப்பில், ஜெய்சங்கர் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான இந்தியாவின் முடிவை ஆதரித்தார், இந்த செயல்முறை சந்தை சக்திகளால் இயக்கப்படுகிறது. "பிப்ரவரி முதல் நவம்பர் வரை, அடுத்தடுத்த இடங்களிலுள்ள 10 நாடுகளை விட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து அதிக படிம எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது," என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சருடன் அவர் விவாதித்த தலைப்புகளில் அடங்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்தால் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த" ஜெர்மனி விரும்புகிறது என்று அன்னலெனா பேர்பாக் கூறினார். "உலகளவில் பல நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது," என்று அவர் கூறினார்.

உக்ரைனைப் பற்றி ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியாவின் நிலைப்பாடு இது "போரின் சகாப்தம் அல்ல, பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க வேண்டும்" என்று கூறினார்.

பிராந்தியத்தில் சீனா முன்வைக்கும் சவால்களைப் பற்றி பேசுகையில், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அன்னலெனா பேர்பாக் கூறினார். அவர் சீனாவை ஒரு போட்டியாளர் மற்றும் எதிராளர் என்று பல வழிகளில் விவரித்தார்.

"ஒரு நாடு அதே மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளாத மற்றொன்றைச் சார்ந்து இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை இப்போது நாங்கள் அறிவோம்," என்று அவர் கூறினார்.

ஜி20 தலைவர் பதவியை இந்தியா முறையாகப் பொறுப்பேற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு, அன்னலெனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக புது தில்லிக்கு வந்துள்ளார். அவரது பயணம் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்களை உள்ளடக்கியது.

முன்னதாக ஒரு அறிக்கையில், “இந்திய அரசாங்கம் G20 இல் மட்டுமல்ல, சொந்த மக்களுக்காகவும் லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை விரிவுபடுத்தும் போது, ​​இந்தியா முன்பை விட ஆற்றல் மாற்றத்துடன் முன்னேற விரும்புகிறது. ஜெர்மனி இந்தியாவின் பக்கம் நிற்கிறது, என்று அன்னலெனா பேர்பாக் கூறினார்.

இருதரப்பு பொருளாதார ஈடுபாடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் கடந்த மாதம் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் ஓரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இடையே நடந்த சந்திப்பில் முக்கிய இடத்தைப் பிடித்தன.

கூடுதல் தகவல்கள் - PTI

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Germany S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment