அந்நிய செலாவணி மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவில் செய்யப்பட்ட அந்நிய முதலீட்டில் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி சிபிஐ முன்பு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.
இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்காக கார்த்திக் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால், கார்த்திக் சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனிடையே, கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது சிபிஐ.அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிடாமல் கண்காணிக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கார்த்திக் சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து, சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையில், கார்த்திக் சிதம்பரத்தின் மீதான லுக் அவுட் நோட்டிஸுக்கு தடையில்லை என்று உத்தரவிட்டதோடு, சிபிஜ விசாரணைக்கு ஆஜராக தயங்குவது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு தந்தால் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.