Advertisment

இந்தியா விரைவில் சந்திரயான் - 3 உருவாக்கி 2021-இல் அனுப்பும்- இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

இந்தியாவின் லட்சிய விண்வெளித் திட்டமான சந்திரயான் -2 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தோல்வியுற்றதாகக் கருதப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் கே.சிவன் சந்திரயான் -3 திட்டம் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா விரைவில் சந்திரயான் - 3 உருவாக்கி 2021-இல் அனுப்பும்- இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

இந்தியாவின் லட்சிய விண்வெளித் திட்டமான சந்திரயான் -2 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தோல்வியுற்றதாகக் கருதப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் கே.சிவன் சந்திரயான் -3 திட்டம் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

2020 ஆம் ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 ஐ அறிமுகப்படுத்தப்போவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அறிவித்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பணியின் முன்னேற்றம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பி.டி.ஐ யிடம் கூறுகையில், “அரசு சந்திரயன் -3 க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு 14-16 மாதங்கள் ஆகலாம் என்பதால் அதன் பணிகள் 2021-க்கு தள்ளப்படலாம்.” என்று கூறினார்.

இரண்டாவது விண்வெளி மையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமையும் என்று கே.சிவன் கூறினார்.

“நாங்கள் சந்திரயான் -2 இல் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்களால் வெற்றிகரமாக தரையிறங்க முடியவில்லை என்றாலும், ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. இது விஞ்ஞான தரவுகளை தயாரிக்க அடுத்த 7 ஆண்டுகளுக்கு செயல்படப் போகிறது” என்று சிவன் கூறினார்.

நீண்ட நாட்களாக இந்திய விண்வெளி அமைப்பு விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் இந்தியாவின் கனவு செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேறாமல் போனது.

விக்ரம் லேண்டருடனான தகவல்தொடர்பு இழந்துவிட்டபோதிலும், திட்டத்தின் நோக்கங்கள் 90-95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரோ கூறியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விக்ரம் லேண்டர் சந்திரனில் ஒரு கடினமான தரையிறக்கம் செய்ததாக விண்வெளி அமைப்பு ஒப்புக்கொண்டது.

இஸ்ரோ ஒரே நேரத்தில் சந்திரயான், ககன்யான் திட்டங்களில் வேலை செய்யும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கு விண்வெளி வீரர்களுகான பயிற்சி ரஷ்யாவில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

Isro K Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment