Advertisment

”முகத்தில் என்னங்க இருக்கு?”: தடைகளை தாண்டி காதலியை கரம்பிடித்த காதலன்

இப்போது இந்த காதல் ஜோடிகளுக்கு 2 அழகான குழந்தைகள். தான் சுனிதா மீது கொண்ட காதலை ஜெயப்பிரகாஷ் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayaprakash-sunitha, love, marriage, life, humanity

காதலுக்கு சாதி, மதம், தேசம் என எதுவுமே தடையாக இருக்க முடியாது. நீங்கள் காதலிப்பவர்கள் எந்தவொரு விபத்தை எதிர்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையே மாறினாலும், நீங்கள் உங்களுடைய வாழ்வின் எல்லைக்கே சென்று உங்கள் காதலை கைப்பிடிப்பீர்கள். அப்படித்தான், ஜெயப்பிரகாஷ் மற்றும் சுனிதாவின் காதலும். எதிர்பாராத விபத்தால் தான் ஏற்கனவே காதலித்த சுனிதா முற்றிலும் வேறு நபராக தோன்றினாலும், தன் காதலின்பால் கொண்ட நம்பிக்கையால், எல்லா தடைகளையும் மீறி சுனிதாவை திருமணம் செய்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். இப்போது இந்த காதல் ஜோடிகளுக்கு 2 அழகான குழந்தைகள். தான் சுனிதா மீது கொண்ட காதலை ஜெயப்பிரகாஷ் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

Advertisment

அதில், ஜெயப்பிரகாஷ் பள்ளி படிப்பின்போது தன் வகுப்பு தோழியான சுனிதா மீது காதல் வந்துள்ளது. ஆனால், அதை சுனிதாவிடம் சொல்லவில்லை. பள்ளி முடிந்தவுடன், ஜெயப்பிரகாஷின் நினைவு புத்தகத்தில் அவரிடம் தான் பேச வேண்டும் என நினைத்ததாக எழுதி கொடுத்திருக்கிறார் சுனிதா. அதன்பின், ஜெயப்பிரகாஷ் கல்லூரிக்கு படிக்க சென்றுவிட்டார். சுனிதா பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

அதன்பின் 2007-ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷின் பிறந்தநாளுக்கு ஒரேயொருமுறை செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் சுனிதா.

2011-ஆம் ஆண்டு தான் யாருமே எதிர்பாராத விபத்துக்கு ஆளானார் சுனிதா. இதை கேள்விபட்ட ஜெயப்பிரகாஷ் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார். சுனிதாவுக்கு முடி இல்லை, கண்டுபிடிக்க முடியாத முகம், மூக்கு இல்லை, உதடு, பற்கள் இல்லை, 90 வயது முதியவர் போன்று நடந்த சுனிதாவை கண்டு அதிர்ச்சியானார் ஜெயப்பிரகாஷ்.

இந்த விபத்தால் சுனிதாவை விட தான் அதிகம் உடைந்துபோனதை உணர்ந்தபோதுதான், சுனிதாவை தான் எந்தளவுக்கு காதலிக்கிறோம் என்பது ஜெயப்பிரகாஷூக்கு புரிந்தது. இதை சுனிதாவிடம் சொன்னபோது முதலில் சிரித்திருக்கிறார். ஆனால், காதலை மறுக்கவில்லை. ஜெயப்பிரகாஷின் அம்மா இந்த காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவரது அப்பா உறுதுணையாக இருந்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இப்போது இரண்டு அழகான குழந்தைகள்.

“சுனிதாவை திருமணம் செய்துகொண்டதால், நான் ஏதோ பெரிய காரியம் செய்ததுபோல் மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், நான் என் காதலியை திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கை சிறப்பாக மாறியிருக்கிறது, இதுதான் உண்மை”, என சாதாரணமாக சொல்லும் ஜெயப்பிரகாஷ், தன் காதலி/காதலனிடம் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் அவர்களை விட்டு பிரிந்து செல்பவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment