3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; ஜவான் வீர மரணம் - ஜம்மு காஷ்மீரில் ராணுவம் அதிரடி
தையல்காரரான குமாரைத் தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் விடுவித்தனர். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மீட்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில் உறுதிப்படுத்தியது
ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தின் படோட் நகரில் சனிக்கிழமையன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்த மோதலில் ஒரு இராணுவ ஜவானும் கொல்லப்பட்டார், இரண்டு போலீசார் காயமடைந்தனர். தற்போது இப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
நேற்று படோட் பகுதியில் ஒரு இராணுவ ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய ஐந்து பயங்கரவாதிகள் இன்று அதே படோட் நகரில் ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.
அந்த வீட்டு உரிமையாளர் விஜார் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக கொண்டுச் செல்லப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தகவல்கள் தெரிவித்தன. தையல்காரரான குமாரைத் தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் விடுவித்தனர். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மீட்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில் உறுதிப்படுத்தியது.
இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் அருகிலுள்ள இணைப்பு சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தகவலின் படி, ஆரம்பத்தில் தீவிரவாதிகள் ஜி.ஆர்.இ.எஃப் பணியாளர் ஒருவரின் குவார்ட்டர்ஸ் அருகே பதுங்கி இருந்தனர். இன்று காலை இராணுவ அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட போது, பீதியடைந்த பயங்கரவாதிகள் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக எண்ணி, இரண்டு அல்லது மூன்று கைக்குண்டுகளை அவர்கள் மீது வீசி துப்பாக்கியால் சுட்டது குறிப்பிடத்தகது.