Advertisment

மாநிலங்களவையில் நிறைவேறிய ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா... முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்த மசோதா ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான லெப்டினன்ட் கவர்னரைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kashmir clampdown: Amit Shah met higher officials

Kashmir clampdown: Amit Shah met higher officials

Jammu & kashmir Reorganization bill 2019 : உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 125 எம்.பி.க்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் மாநிலம் இப்போது ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.

Advertisment

Jammu & kashmir Reorganization bill 2019 Key points : ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும். லடாக்கை துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் கார்கில் பகுதிக இணைகின்றன. தவிர, ஜம்மு காஷ்மீரின் இதர சில பகுதிகள் லடாக்கில் இணைகின்றன. இவற்றைத் தவிர மீதமுள்ள பகுதிகள் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு & காஷ்மீரிலேயே தொடரும்.

ஜம்மு காஷ்மீரின் ஆறு மக்களவை தொகுதிகளில், ஐந்து ஜம்மு காஷ்மீரிலேயே தொடரும். ஒன்று மட்டும் லடாக்கில் இடம்பெறும். தேர்தல் ஆணையம், இவ்விரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் ஒருசேர தேர்தல் நடத்த முடியும்.

இந்த மசோதா மூலம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மொத்த சட்டப்பேரவை தொகுதிகள் 107லிருந்து 114ஆக உயர்த்தப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மாநில சபையின் நான்கு உறுப்பினர்களும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படுவார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இனி ஜம்மு காஷமீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றாக அமையும்.

சட்டமன்றம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முழு அல்லது எந்த பகுதிக்கும் மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விஷயத்திற்கும் சட்டங்களை உருவாக்கலாம், ஆனால், “பொது ஒழுங்கு” மற்றும் “போலீஸ்” ஆகியவை மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கும் சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால், முந்தைய சட்டம் மேலோங்கி, சட்டமன்றத்தால் செய்யப்பட்ட சட்டம் வெற்றிடமாக இருக்கும்.

இந்த மசோதா ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான லெப்டினன்ட் கவர்னரைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது. தற்போதுள்ள ஜம்மு-காஷ்மீர் ஆளுநரான சத்ய பால் மாலிக், பொதுவான துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

லெப்டினன்ட் கவர்னர், தேவைப்பட்டால்-

சபையை ஒத்திவைக்கவும்,

சட்டமன்றத்தை கலைக்கவும் உள்ளது.

-முதல்வரை துணை நிலை ஆளுநர் நியமிக்க வேண்டும், ஆளுநரே முதல்வரின் உதவியுடன் மற்ற அமைச்சர்களையும் நியமிப்பார்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment