Advertisment

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்!

கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ கைது செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Advertisment

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிணைத்தொகையாக ரூ 10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Delhi High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment