Advertisment

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காஷ்மீர் பத்திரிகையாளர்

Kashmir journalist Stopped from flying to Germany: காஷ்மீர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் ஜிலானி, ஜெர்மனியின் பொது ஒளிபரப்பாளரான டாய்ட்சே வெல்லே ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kashmir journalist stopped to fly internationally, gowhar geelani journalist stopped at airport, காஷ்மீர் பத்திரிகையாளர் ஜிலானி, பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம், article 370, jammu and kashmir, kashmir news, article 35a, gowhar geelani stopped to travel, kashmiri journalist stopped to travel, Tamil indian express news

kashmir journalist stopped to fly internationally, gowhar geelani journalist stopped at airport, காஷ்மீர் பத்திரிகையாளர் ஜிலானி, பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம், article 370, jammu and kashmir, kashmir news, article 35a, gowhar geelani stopped to travel, kashmiri journalist stopped to travel, Tamil indian express news

Kashmir journalist Stopped from flying to Germany: காஷ்மீர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் ஜிலானி, ஜெர்மனியின் பொது ஒளிபரப்பாளரான டாய்ட்சே வெல்லே ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த மாத தொடக்கத்தில், காஷ்மீர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஷா ஃபேசல் அமெரிக்காவின் போஸ்டனுக்கு செல்லும் வழியில் புது டெல்லியின் ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஆரம்பத்தில் ஜெர்மனியில் டாய்ட்சே வெல்லில் பணிபுரிந்த ஜிலானி, சமீபத்தில் மீண்டும் ஒரு ஆசிரியராக ஊடக அமைப்பு ஒன்றில் சேர்ந்ததாகவும், அவர் செப்டம்பர் 1 முதல் ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது எட்டு நாள் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்திற்காக அதன் தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறினார்.

ஜிலானி கூறுகையில், “நான் விமான நிலைய வருகைப்பதிவுக்கு சென்றேன். அங்கே குடிவரவு ஊழியர்களுடன் ஒரு அறைக்கு வருமாறு ஊழியர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அங்கு தன்னை அபிஷேக் என்று அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு அதிகாரி, என்னை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காதபடி அறிவுறுத்தல்கள் இருப்பதாக என்னிடம் கூறினார். ” என்று தெரிவித்தார்.

அதற்கு விளக்கம் கோரியதாகவும், எழுத்துப்பூர்வ உத்தரவைக் காட்டும்படி அதிகாரியிடம் கேட்டதாகவும் ஜிலானி கூறினார். “ஆனால் அந்த அதிகாரி எந்த எழுத்துப்பூர்வமான உத்தரவையும் விளக்கத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார். காஷ்மீரில் தற்போதைய நிலைமை காரணமாக (அவர் நிறுத்தப்பட்டார்), அவர் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார் என்று அவர் என்னிடம் கூறினார். ”

புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் ஜிலானி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.ஐ விமான நிலைய வட்டாரங்கள் தி சண்டே எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. அவரது பொருள்கள் ஏற்கனவே ஏற்றப்பட்டுவிட்டதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. “இப்போதைக்கு, அவர் குடிவரவு அதிகாரிகளுடன் இருக்கிறார். புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; அவர்கள் அவரை மேலும் கேள்வி கேட்பார்கள்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

India Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment